பதிவு செய்த நாள்
07 அக்2012
00:22
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற செப்., 28ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 84 கோடி டாலர் (4,620 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,481 கோடி டாலராக (16.21 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, 21ம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், 29,397 கோடி டாலர் (16.16 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 189 கோடி டாலர் உயர்ந்து, 2,813 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதே சமயம், இதே காலத்தில், அன்னிய செலாவணிகளின் சொத்து மதிப்பு, 107 கோடி டாலர் குறைந்து, 25,995 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|