பதிவு செய்த நாள்
07 அக்2012
00:40
புதுடில்லி:இந்திய அரிசி வகைகளுக்கு அயல்நாடுகளில் கிராக்கி அதிகரித்துள்ளது.
சென்ற 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் அரிசி ஏற்றுமதி, 1 கோடி டன்னாக உயர்ந்திருக்கும் என, அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது.போட்டி: சென்ற ஆண்டு, செப்டம்பரில், அரிசி ஏற்றுமதி மீதான தடையை, மத்திய அரசு நீக்கியது.நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, ஏற்றுமதியாகி வரும் இந்திய அரிசி, சர்வதேச சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
இதர நாடுகளின் அரிசியை விட, இந்திய அரிசியின் விலை குறைவாக உள்ளதே இதற்கு காரணம். சென்ற சந்தை பருவத்தில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த, ஒன்பது மாத காலத்தில், இந்தியாவிலிருந்து, 82 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. இதில், பாசுமதி அரிசி 27 லட்சம் டன் என்ற அளவிலும், சாதாரண அரிசி 55 லட்சம் டன்னாகவும் உள்ளது.சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படவில்லை. இதனால், இம்மாதங்களில், இந்தியாவிலிருந்து, அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய அரிசி வகைகளின் விலை, டன்னுக்கு, 375 - 450 டாலர் என்ற குறைந்த அளவிலேயே இருந்தது.கையிருப்பு: சென்ற செப்., 1ம் தேதி நிலவரப்படி, நாட்டின் அரிசி கையிருப்பு, 2.56 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 29 லட்சம் டன் அதிகமாகும்.அளவிற்கதிகமான உணவு தானியங்களின் கையிருப்பும், உபரி உற்பத்தியாலும், அரிசி ஏற்றுமதி குறித்த அரசின் கொள்கையில் மாற்றம் ஏதும் இருக்காது என, தெரிகிறதுமுந்தைய பருவத்தில், மழை பொழிவு காரணமாக, நாட்டின் அரிசி உற்பத்தி, 10.43 கோடி டன்னாக அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|