நிறுவனங்களின் கையகப்படுத்தல் இணைப்பு நடவடிக்கைகளில் சரிவுநிறுவனங்களின் கையகப்படுத்தல் இணைப்பு நடவடிக்கைகளில் சரிவு ... வரத்து அதிகரிப்பால் பாமாயில் விலை வீழ்ச்சி வரத்து அதிகரிப்பால் பாமாயில் விலை வீழ்ச்சி ...
இந்திய அரிசிக்கு அயல்நாடுகளில் கிராக்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2012
00:40

புதுடில்லி:இந்திய அரிசி வகைகளுக்கு அயல்நாடுகளில் கிராக்கி அதிகரித்துள்ளது.
சென்ற 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் அரிசி ஏற்றுமதி, 1 கோடி டன்னாக உயர்ந்திருக்கும் என, அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது.போட்டி: சென்ற ஆண்டு, செப்டம்பரில், அரிசி ஏற்றுமதி மீதான தடையை, மத்திய அரசு நீக்கியது.நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, ஏற்றுமதியாகி வரும் இந்திய அரிசி, சர்வதேச சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
இதர நாடுகளின் அரிசியை விட, இந்திய அரிசியின் விலை குறைவாக உள்ளதே இதற்கு காரணம். சென்ற சந்தை பருவத்தில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த, ஒன்பது மாத காலத்தில், இந்தியாவிலிருந்து, 82 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. இதில், பாசுமதி அரிசி 27 லட்சம் டன் என்ற அளவிலும், சாதாரண அரிசி 55 லட்சம் டன்னாகவும் உள்ளது.சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படவில்லை. இதனால், இம்மாதங்களில், இந்தியாவிலிருந்து, அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய அரிசி வகைகளின் விலை, டன்னுக்கு, 375 - 450 டாலர் என்ற குறைந்த அளவிலேயே இருந்தது.கையிருப்பு: சென்ற செப்., 1ம் தேதி நிலவரப்படி, நாட்டின் அரிசி கையிருப்பு, 2.56 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 29 லட்சம் டன் அதிகமாகும்.அளவிற்கதிகமான உணவு தானியங்களின் கையிருப்பும், உபரி உற்பத்தியாலும், அரிசி ஏற்றுமதி குறித்த அரசின் கொள்கையில் மாற்றம் ஏதும் இருக்காது என, தெரிகிறதுமுந்தைய பருவத்தில், மழை பொழிவு காரணமாக, நாட்டின் அரிசி உற்பத்தி, 10.43 கோடி டன்னாக அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)