வரத்து அதிகரிப்பால் பாமாயில் விலை வீழ்ச்சிவரத்து அதிகரிப்பால் பாமாயில் விலை வீழ்ச்சி ... சர்வதேச காபி உற்பத்தியில் இந்தியாவுக்கு பின்னடைவு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - சர்வதேச காபி உற்பத்தியில் இந்தியாவுக்கு பின்னடைவு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் ... ...
எள் ஏலத்தில் வியாபாரிகளிடையே கடும் @பாட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2012
00:50

நாமக்கல்:ஈரோடு @வளாண் உற்பத்தியாளர் விற்பனை கூடத்தில் நடைபெறும் எள் ஏலத்தில் வியாபாரிகளிடை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் எள் அதிக விலைக்கு ஏலம் போனது.நாமக்கல், ப.வேலூர் சுற்றுவட்டார கிராமங்களான, வாழவந்தி, மாணிக்கநத்தம், கரப்பாளையம், கபிலர் மலை உள்ளிட்ட பகுதிகளில், 1,000 ஏக்கர் பரப்பளவிற்கு, எள் சாகுபடி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் எள், களத்தில் இட்டு, செடியிலிருந்து தனியாக பிரித்து காய வைக்கப்படுகிறது. அதன்பின், அவை, 100 கிலோ மூட்டையாக தனித் தனியாக கட்டப்படுகிறது. இங்கிருந்து, வாரந்தோறும், ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் விற்பனைக் கூடத்துக்கு அனுப்பப்படுகிறது.வேளாண் உற்பத்தியாளர் கூடத்தில் நடக்கும் ஏலத்தில், எள்ளுக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நல்லெண்ணெய் தயாரிப்பின், மூலப் பொருளாக எள் உள்ளது. எனவே, அவற்றை ஏலத்தில் எடுப்பதற்காக, வியாபாரிகள் இடையே கடும் போட்டி ஏற்படும். இதற்காக, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், எள் ஏல சந்தையில் குவிவது வழக்கம்.
சிறந்த தரம்: சில வாரங்களுக்கு முன் வரை, 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை எள், 5,500 ரூபாய் வீதம் ஏலம் போனது. இந்நிலையில், இம்மாதம், 17ம் தேதி நிலவரப்படி, எள் விலை மூட்டைக்கு, 2,000 ரூபாய் வீதம் அதிகரித்து, 7,500 ரூபாய்க்கு ஏலம் போனது.
வியாபாரிகள், எள் விலை ஏற்றத்தை பொருட்படுத்தாமல், அதை ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டி வருகின்றனர். ஏலத்தில் எடுக்கப்படும் எள், எண்ணெய் தயாரிப்புக்காக, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.இதுகுறித்து எள் விவசாயிகள் சிலர் கூறியதாவது: ப.வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில், எள் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் எள், தரமானதாக உள்ளது. இத்தகைய, எள் வகைகள் விற்பனைக்காக, கொடுமுடி வேளாண் உற்பத்தியாளர் விற்பனை கூடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு சில வியாபாரிகள், ப.வேலூருக்கே நேரடியாக வந்து, விவசாயிகளிடம் விலை பேசி, எள்ளை கொள்முதல் செய்கின்றனர்.

விளைச்சல்: விற்பனைக் கூடத்தில் நிர்ணயம் செய்யும் விலையை தான், நேரடியாக வாங்கும் வியாபாரிகளும் கொடுப்பர்.எள் விளைச்சல் சிறப்பாக இருப்பதாலும், வியாபாரிகள் மத்தியில் நிலவும் போட்டி காரணமாகவும், சென்ற வாரம் ஒரு மூட்டை எள் விலை, 2,000 ரூபாய் வீதம் அதிகரித்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)