குக்கிராம மக்களுக்கு ஒரு நற்செய்தி அலைபேசி கட்டணத்திற்கு மத்திய அரசு மானியம்குக்கிராம மக்களுக்கு ஒரு நற்செய்தி அலைபேசி கட்டணத்திற்கு மத்திய அரசு ... ... மூன்றாவது "ட்ரீம்லைனர்'ஏர் இந்தியாவுக்கு கிடைத்தது மூன்றாவது "ட்ரீம்லைனர்'ஏர் இந்தியாவுக்கு கிடைத்தது ...
கிங் பிஷர் விமான உரிமம் ரத்தாகுமா? அமைச்சர் பதில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2012
14:36

புதுடில்லி:""கிங் பிஷர் விமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதா, இல்லையா என்பது குறித்து, மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் - டி.ஜி.சி.ஏ., தான், முடிவு செய்யும்,'' என, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் கூறினார்.

தொழில் அதிபர் விஜய் மல்லய்யாவுக்குச் சொந்தமான, கிங் பிஷர் விமான நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும், பைலட் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, ஏழு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, கிங் பிஷர் விமான நிறுவனத்தின் ஒட்டு மொத்த சேவைகளையும், வரும், 12ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக, அந்த நிறுவனம் அறிவித்தது. அதிருப்தி அடைந்த, டி.ஜி.சி.ஏ., அதிகாரிகள், "பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் கூடிய சேவைகளை வழங்க தவறியதற்காக, உங்கள் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை, ஏன் ரத்து செய்யக்கூடாது' எனக் கேட்டு, கிங் பிஷர் நிறுவனத்துக்கு, நேற்று முன்தினம், நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த விவகாரம் குறித்து, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங், நேற்று கூறியதாவது:கிங் பிஷர் நிறுவனத்துக்கு, டி.ஜி.சி.ஏ., சார்பில் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் அந்த நிறுவனம், இதுகுறித்து விளக்கமான பதில் அளிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.கிங் பிஷர் நிறுவனம் தரும் விளக்கத்தைப் பொறுத்து, அடுத்த கட்டமாக முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அஜித் சிங் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)