பதிவு செய்த நாள்
07 அக்2012
14:36
புதுடில்லி:""கிங் பிஷர் விமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதா, இல்லையா என்பது குறித்து, மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் - டி.ஜி.சி.ஏ., தான், முடிவு செய்யும்,'' என, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் கூறினார்.
தொழில் அதிபர் விஜய் மல்லய்யாவுக்குச் சொந்தமான, கிங் பிஷர் விமான நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும், பைலட் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, ஏழு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, கிங் பிஷர் விமான நிறுவனத்தின் ஒட்டு மொத்த சேவைகளையும், வரும், 12ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக, அந்த நிறுவனம் அறிவித்தது. அதிருப்தி அடைந்த, டி.ஜி.சி.ஏ., அதிகாரிகள், "பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் கூடிய சேவைகளை வழங்க தவறியதற்காக, உங்கள் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை, ஏன் ரத்து செய்யக்கூடாது' எனக் கேட்டு, கிங் பிஷர் நிறுவனத்துக்கு, நேற்று முன்தினம், நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த விவகாரம் குறித்து, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங், நேற்று கூறியதாவது:கிங் பிஷர் நிறுவனத்துக்கு, டி.ஜி.சி.ஏ., சார்பில் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் அந்த நிறுவனம், இதுகுறித்து விளக்கமான பதில் அளிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.கிங் பிஷர் நிறுவனம் தரும் விளக்கத்தைப் பொறுத்து, அடுத்த கட்டமாக முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அஜித் சிங் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|