பதிவு செய்த நாள்
09 அக்2012
04:15
புதுடில்லி:மத்திய அரசு, நாட்டின் விமான போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், அடுத்து வரும் சில ஆண்டுகளில், புதிதாக 15 பசுமை விமான நிலையங்களை, புறநகர் பகுதிகளில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தவிர, மேலும் புற நகர் பகுதிகளில் செயல்படும், 50 விமான நிலையங்களை நவீனபடுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:உள்நாட்டு விமான போக்குவரத்து துறை ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில், இத்துறை இரட்டை இலக்கு வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில், வர்த்தக நடவடிக்கைகள் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், பெரும்பான்மையான நடுத்தர பிரிவினர் வாழ்க்கை தரமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, விமான போக்குவரத்து கணிசமான அளவிற்கு வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பொது-தனியார் பங்களிப்புடன், பசுமை விமான நிலையங்கள் மற்றும் நாட்டில் உள்ள விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.டில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் தனியார் துறை பங்களிப்புடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. சென்னை, கோல்கட்டா ஆகிய நகரங்களில், புதிய விமான நிலையங்களின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. தற்போது, பசுமை விமான நிலையங்கள் அமைக்கும் திட்டங்களில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அஜித்சிங் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|