நோக்கியாவை முந்தும் சாம்சங்நோக்கியாவை முந்தும் சாம்சங் ... பொது - தனியார் பங்கேற்பு திட்டங்கள்: தமிழகம் முன்னிலை பொது - தனியார் பங்கேற்பு திட்டங்கள்: தமிழகம் முன்னிலை ...
புதிதாக 15 பசுமை விமான நிலையங்கள் அமைக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2012
04:15

புதுடில்லி:மத்திய அரசு, நாட்டின் விமான போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், அடுத்து வரும் சில ஆண்டுகளில், புதிதாக 15 பசுமை விமான நிலையங்களை, புறநகர் பகுதிகளில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தவிர, மேலும் புற நகர் பகுதிகளில் செயல்படும், 50 விமான நிலையங்களை நவீனபடுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:உள்நாட்டு விமான போக்குவரத்து துறை ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில், இத்துறை இரட்டை இலக்கு வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில், வர்த்தக நடவடிக்கைகள் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், பெரும்பான்மையான நடுத்தர பிரிவினர் வாழ்க்கை தரமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, விமான போக்குவரத்து கணிசமான அளவிற்கு வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பொது-தனியார் பங்களிப்புடன், பசுமை விமான நிலையங்கள் மற்றும் நாட்டில் உள்ள விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.டில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் தனியார் துறை பங்களிப்புடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. சென்னை, கோல்கட்டா ஆகிய நகரங்களில், புதிய விமான நிலையங்களின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. தற்போது, பசுமை விமான நிலையங்கள் அமைக்கும் திட்டங்களில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அஜித்சிங் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)