பதிவு செய்த நாள்
09 அக்2012
04:22
புதுடில்லி:மத்திய அரசு, 113 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.பிரைம் சர்ஜிகல் சென்டர்ஸ் நிறுவனம், 14 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய முதலீடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தை சேர்ந்த டஸ்தாக் நிறுவனம், 68 கோடி ரூபாயும், அட்வான்ஸ்டு என்சைம் டெக்னாலஜிஸ் நிறுவனம், 10 கோடி ரூபாயும் முதலீடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், எரிகா நிறுவனம், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் ஆப் இந்தியா, கே.எஸ்.கே.எனர்ஜி வென்சர், மல்டி ஸ்கிரீன் மீடியா உள்ளிட்ட, ஒன்பது அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கான அனுமதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும், ஈ.சி.எல்., இன்ஜினியரிங் சர்வீசஸ் இந்தியா, பிரிட்டிஷ் மரைன் இந்தியா, அட்லஸ் ஈக்யூபின் உள்ளிட்ட, ஏழு நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|