பதிவு செய்த நாள்
09 அக்2012
10:35
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 150.80 புள்ளிகள் அதிகரித்து 18859.78 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 48.80 புள்ளிகள் அதிகரித்து 5724.80 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான, நேற்று மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, கடந்த 10 நாட்களில் இல்லாத அளவாக, பங்கு வியாபாரம் நேற்று சரிவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|