பதிவு செய்த நாள்
09 அக்2012
12:37
புதுடில்லி:பெட்ரோல் விலை லிட்டருக்கு, 56 காசு குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டு முறையை, மத்திய அரசு, 2010 ஜூனில் கைவிட்டது. அது, முதல், சர்வதேச சந்தையில் உள்ள, கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், "இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' ஆகிய, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை அவ்வப்போது, மாற்றி அமைத்து வருகின்றன.அதன்படி, ஜூன், 24ம் தேதி, பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, 70 காசு விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நேற்று பெட்ரோல் விலை, 56 காசு குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில், நேற்று பெட்ரோல் விலை, உள்ளூர் வரிகள் சேர்த்து, லிட்டருக்கு 72.19 ரூபாயாக விற்கப்பட்டது. இன்று, அதை விட, 56 காசு குறைக்கப்பட்டு, 71.48 ரூபாய்க்கு விற்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|