வேளாண் கடன் ரூ.1.36 லட்சம் கோடிவேளாண் கடன் ரூ.1.36 லட்சம் கோடி ... பதப்படுத்தப்பட்ட முந்திரி இறக்குமதியால் உள்நாட்டு தொழில் பாதிப்பு பதப்படுத்தப்பட்ட முந்திரி இறக்குமதியால் உள்நாட்டு தொழில் பாதிப்பு ...
கடந்த ஆண்டை காட்டிலும்... "உணவு தானிய உற்பத்தி குறையும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2012
00:57

புதுடில்லி:நடப்பு 2012-13ம் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), உணவு தானிய உற்பத்தி, சென்ற பயிர் பருவத் தின் சாதனை அளவான, 25.74 கோடி டன்னைக் காட்டிலும் சரிவடையும் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் தெரிவித்தார்.
வறட்சி:நாட்டின் சில பகுதிகளில் தாமதமான மழை பொழிவு, வறட்சி போன்ற வற்றால், உணவு தானிய உற்பத்தி சீரற்ற நிலையில் உள்ளது.குறிப்பாக, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்க ளில், 360க்கும் மேற்பட்ட தாலுகாக்களில், அண்மையில் முடிவடைந்த கரீப் பருவத்தில், உணவு தானிய உற்பத்தி, 10 சதவீதம் சரிவடைந்து, 11.72 கோடி டன்னாக குறையும் என, வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், மழைபொழிவு நல்ல அளவில் இருந்தது. இது, ரபி பருவ உணவு தானிய உற்பத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது.தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக நாட்டின் உணவு தானிய உற்பத்தி, சாதனை அளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஒரு கோடி டன் அரிசி, தலா 25 லட்சம் டன் சர்க்கரை மற்றும் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.மத்திய கிடங்குகளில், உணவு தானிய சேமிப்பு ஏழு கோடி டன் என்ற அளவில் உள்ள நிலையில், இது, நிர்ணயிக்கப்பட்ட உபரி அளவான, 2.12 கோடி டன்னை விட, அதிகம் என, சரத்பவார் மேலும் கூறினார்.
அன்னிய நேரடி முதலீடு:பன்முக பொருட்களின் சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதி வரவேற்கத்தக்கது. இதனால், விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மேலும், தரமான பொருட்களை நுகர்வோர் பெறமுடியும் என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)