பதிவு செய்த நாள்
10 அக்2012
00:57
புதுடில்லி:நடப்பு 2012-13ம் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), உணவு தானிய உற்பத்தி, சென்ற பயிர் பருவத் தின் சாதனை அளவான, 25.74 கோடி டன்னைக் காட்டிலும் சரிவடையும் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் தெரிவித்தார்.
வறட்சி:நாட்டின் சில பகுதிகளில் தாமதமான மழை பொழிவு, வறட்சி போன்ற வற்றால், உணவு தானிய உற்பத்தி சீரற்ற நிலையில் உள்ளது.குறிப்பாக, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்க ளில், 360க்கும் மேற்பட்ட தாலுகாக்களில், அண்மையில் முடிவடைந்த கரீப் பருவத்தில், உணவு தானிய உற்பத்தி, 10 சதவீதம் சரிவடைந்து, 11.72 கோடி டன்னாக குறையும் என, வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், மழைபொழிவு நல்ல அளவில் இருந்தது. இது, ரபி பருவ உணவு தானிய உற்பத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது.தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக நாட்டின் உணவு தானிய உற்பத்தி, சாதனை அளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஒரு கோடி டன் அரிசி, தலா 25 லட்சம் டன் சர்க்கரை மற்றும் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.மத்திய கிடங்குகளில், உணவு தானிய சேமிப்பு ஏழு கோடி டன் என்ற அளவில் உள்ள நிலையில், இது, நிர்ணயிக்கப்பட்ட உபரி அளவான, 2.12 கோடி டன்னை விட, அதிகம் என, சரத்பவார் மேலும் கூறினார்.
அன்னிய நேரடி முதலீடு:பன்முக பொருட்களின் சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதி வரவேற்கத்தக்கது. இதனால், விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மேலும், தரமான பொருட்களை நுகர்வோர் பெறமுடியும் என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|