பதிவு செய்த நாள்
10 அக்2012
10:25
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்க நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 127.22 புள்ளிகள் குறைந்து 18666.14 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 43.20 புள்ளிகள் குறைந்து 5661.40 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. பல நிறுவனப் பங்கு களின் விலை குறைந்திருந்ததை சாதக மாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை, சர்வதேச நிதியம் குறைத்து உள்ளது. இதையடுத்து, அந்நாடு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பால், ஜப்பான் தவிர்த்த இதர ஆசியப் பங்குச்சந்தை களில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமா கவே இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|