தங்கம் விலை சற்று உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ... "சாக்லெட்' துறையின் சந்தைரூ.7,500 கோடியை தாண்டும் "சாக்லெட்' துறையின் சந்தைரூ.7,500 கோடியை தாண்டும் ...
இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு ரூ.7,480 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2012
01:20

புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், அயல்நாடுகளில் மேற் கொண்ட முதலீடு, 136 கோடி டாலராக (7,480 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், மேற்கொள்ளப்பட்டதை விட, (195 கோடி டாலர்/10,725 கோடி ரூபாய்) 30 சதவீதம் குறைவு என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், இந்திய நிறுவனங்கள், 406 ஒப்பந்தங்கள் வாயிலாக, அயல்நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. இதில், நாட்டின் முன்னணி நிறுவனங்களான பார்தி ஏர்டெல், ஜே.கே.சிமென்ட், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளன. தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம், மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த அதன் துணை நிறுவனத்தில், போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்வதற்காக, 15 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது.
ஜே.கே.சிமென்ட் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த, அதன் துணை நிறுவனத்தில், 10.40 கோடி டாலரையும், டிராக்டர் அண்டு பார்ம் எக்யூப்மென்ட் நிறுவனம், அதன் அமெரிக்க துணை நிறுவனத்தில், 6.50 கோடி டாலரையும் முதலீடு செய்துள்ளன.
டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம், சைப்ரஸ் நாட்டை சேர்ந்த அதன் துணை நிறுவனத்தில், 5.89 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. நவ பாரத் வென்சர்ஸ் நிறுவனம், சிங்கப்பூரை சேர்ந்த அதன் துணை நிறுவனத்தில், 5 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)