பதிவு செய்த நாள்
12 அக்2012
01:06
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல், 2.72 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, (2.57 லட்சம் கோடி ரூபாய்) 5.87 சதவீதம் அதிகம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள் செலுத்திய வரி, 1.60 சதவீதம் உயர்ந்து, 1.75 லட்சம் கோடியிலிருந்து, 1.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தனிநபர் செலுத்திய வருமான வரி, 14.87 சதவீதம் வளர்ச்சி கண்டு, 81,353 கோடியிலிருந்து, 93,451 கோடி ரூபாயாகவும், செல்வ வரி, 53.9 சதவீதம் வளர்ச்சியடைந்து, 308 கோடியில் இருந்து, 474 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
அதே சமயம், பங்கு பரிவர்த்தனை வரி, 17.03 சதவீதம் சரிவடைந்து, 2,502 கோடியிலிருந்து, 2,076 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, குறைந்த அளவு தொகையே திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிகர நேரடி வரி வருவாய், 16.32 சதவீதம் உயர்ந்து, 1.94 லட்சம் கோடியிலிருந்து, 2.26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|