பதிவு செய்த நாள்
12 அக்2012
01:15
புதுடில்லி:தொடர்ந்து ஐந்து மாதங்களாக, நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா:குறிப்பாக, இந்திய ஏற்றுமதிக்கு முக்கிய சந்தைகளாக திகழும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் மந்த நிலை காணப்படுகிறது.சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,369 கோடி டாலர் (1.30 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் குறைந்துள்ளது. இது<, முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,656 கோடி டாலர் / 1.46 லட்சம் கோடி ரூபாய்) விட, 10.78 சதவீதம் குறைவாகும்.
இதே மாதங்களில், இறக்குமதி, 5 சதவீதம் அதிகரித்து, 3,975 கோடி டாலர் (2.18 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவிலிருந்து, 4,177 கோடி டாலராக (2.29 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை, 1,808 கோடி டாலராக (99,440 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 14,360 கோடி டாலராக (7.89 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (15,410 கோடி டாலர்/8.47 லட்சம் கோடி ரூபாய்) விட, 6.79 சதவீதம் குறைவாகும்.மதிப்பீட்டு காலத்தில், இறக்குமதி, 4.63 சதவீதம் குறைந்து, 23,292 கோடி டாலராக (12.81 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை :வர்த்தக பற்றாக்குறை, 8,932 கோடி டாலர் (4.91 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.கச்சா எண்ணெய் இறக்குமதி, 6.78 சதவீதம் உயர்ந்து, 8,078 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம், எண்ணெய் அல்லாத இதர பொருட்கள் இறக்குமதி, 9.38 சதவீதம் குறைந்து, 15,214 கோடி டாலராக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|