சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனையில் சரிவுசர்வதேச கம்ப்யூட்டர் விற்பனையில் சரிவு ... அன்னிய செலாவணி கையிருப்பு : 29,504 கோடி டாலராக உயர்வு அன்னிய செலாவணி கையிருப்பு : 29,504 கோடி டாலராக உயர்வு ...
உற்பத்தி குறைவால் வெங்காயம் விலை உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2012
00:33

புதுடில்லி : சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த கரீப் பருவத்தில், உள்நாட்டில், வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளதால், இதன் விலை உயரக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா உள்நாட்டில், அதிக அளவில் வெங்காயம் உற்பத்தியாகும், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், அண்மையில் முடிவுற்ற கரீப் பருவத்தில், இதன் சாகுபடி பரப்பளவு, குறைந்துள்ளது.

இதனால், வெங்காயம் விலை உயரும் என, நாசிக் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். தற்போது, நாசிக் சந்தையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 900 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, அடுத்த மாதத்தில், 1,500 ரூபாயாக உயரக் கூடும் என, அவர் மேலும் கூறினார். விற்பனை பொதுவாக, கரீப் பருவத்தில், சாகுபடி செய்யப்படும் வெங்காயம், நவம்பர் மாதம் முதற்கொண்டு, சந்தைக்கு விற்பனைக்கு வரும். சென்ற கரீப் பருவத்தில், மேற்கண்ட மாநிலங்களில், பருவ மழை குறைந்ததால், இதன் உற்பத்தி குறைந்துள்ளது.கடந்த ஆண்டு, வெங்காயம் உற்பத்தி மிகவும் சிறப்பாக இருந்ததால், சில மாதங்களாக இதன் விலை உயராமல் இருந்தது. குறிப்பாக, நாட்டின் முக்கிய பெரு நகரங்களில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 12 முதல் 18 ரூபாய் வரை விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு வெங்காயம் உற்பத்தி அதிகரித்தது. அதனால், மத்திய அரசு, சென்ற மாதம், வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது.மேலும், வெங்காயம் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கப்பட்டது. இதையடுத்து, சென்ற ஜூன் மாதம் முதல், இதுவரையிலுமாக, நம் நாட்டிலிருந்து, ஒரு லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2010ம் ஆண்டில், வெங்காயம் உற்பத்தி குறைந்ததை அடுத்து, உள்நாட்டில், இதன் விலை மிகவும் அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவ்வாண்டில், வெங்காயம் விலை உயர்வால், நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகரித்தது. உள்நாட்டு தேவையை சமாளிக்கும் வகையில், பாகிஸ்தானில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இரண்டாவது இடம் உலகளவில், வெங்காயம் உற்பத்தியில், இந்தியா இரண்டாவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், 15 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 1,714 கோடி ரூபாய். இதேபோன்று, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 2,159 கோடி ரூபாய் மதிப்பிற்கு, வெங்காயம் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது.
நம் நாட்டிலிருந்து, இலங்கை, வங்கதேசம், ரஷ்யா, மொரீஷியஸ், சீனா, சிங்கப்பூர், வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெங்காயம் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. உற்பத்தி கடந்த 2011-12ம் பருவத்தில் (ஜூலை - ஜூன்), நாட்டின், வெங்காயம் உற்பத்தி, 1.51 கோடி டன்னாக இருந்தது. நாட்டின், மொத்த வெங்காயம் உற்பத்தியில், மகாராஷ்டிரா, 40 சதவீத பங்களிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, கர்நாடகம், தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)