உள்நாட்டு சந்தையை நாடும் வைர ஏற்றுமதியாளர்கள் உள்நாட்டு சந்தையை நாடும் வைர ஏற்றுமதியாளர்கள் ... உயிருடன் விளையாடும் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஒளியில் சரக்கு விற்பனை! உயிருடன் விளையாடும் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஒளியில் சரக்கு விற்பனை! ...
ஆயுத பூஜை நெருங்குவதால் அரிசி பொரி விலை "கிடுகிடு'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2012
00:12

ப.வேலூர்: ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருதால், பொரி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் தயார் செய்யப்படும் பொரிக்கு, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம்.பவானி அரிசிஇதற்கு, கர்நாடக மாநிலத்தில் விளையும், பவானி அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுவதே காரணமாகும்.ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில், பரமத்தி வேலூர் பகுதியில், பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது.இதுகுறித்து, சுல்தான்பேட்டை பொரி உற்பத்தியாளர் ராமசாமி கூறியதாவது:பரமத்தி வேலூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொரியை, நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
உப்பு, சோடா, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து, பொரி தயார் செய்யப்படுகிறது. அதனால், மற்ற பகுதிகளில் தயார் செய்யப்படும் பொரியைக் காட்டிலும், இங்கு தயாராகும் பொரியின் சுவை அலாதியாக இருக்கும்.கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பவானி நெல்லை கொள்முதல் செய்து, பொரி தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி, 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சீசன் நெருங்கும் சமயத்தில், அதன் விலை, 350 ரூபாயாக உயர்ந்தது.

ஆனால், நடப்பாண்டில், தற்போதே, ஒரு மூட்டை பொரி, 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கும் சமயத்தில், இதன் விலை, 500 ரூபாய் வரை ஏற்றம் காண வாய்ப்புள்ளது. இந்த விலையேற்றத்துக்கு, அரிசி விலை உயர்வு முக்கிய காரணம்.கர்நாடகாவில் இருந்து ஒரு மூட்டை நெல்லை கொண்டு வந்து, பொரி தயாரிப்பதற்கான செலவு, 1,000 ரூபாயில் இருந்து 1,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், பொரி விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)