பதிவு செய்த நாள்
16 அக்2012
00:06
புதுடில்லி: நாட்டின், தாவர எண்ணெய் இறக்குமதி, நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ., - அக்.,), செப்டம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், 92 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (78 லட்சம் டன்) விட, 18 சதவீதம் அதிகம் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.நடப்பு எண்ணெய் பருவத்தில், செப்டம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், 89.63 லட்சம் டன் சமையல் எண்ணெய் வகைகளும், 1.93 லட்சம் டன், சமையலுக்கு பயன்படாத எண்ணெய் வகைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை, கடந்த ஆண்டின், இதே காலத்தில், முறையே, 74.94 லட்சம் டன் மற்றும் 2.80 லட்சம் டன்னாக இருந்தன.கணக்கீட்டு காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, 84 சதவீதம் அதிகரித்து, அதாவது, 9.62 லட்சம் டன்னிலிருந்து, 15.16 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என, இச்சங்கம் தெரிவித்துள்ளது.ஒட்டுமொத்த அளவில், கணக்கீட்டு காலத்தில், சுத்தி கரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளின் பங்களிப்பு, 17 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், கச்சா தாவர எண்ணெய் இறக்குமதி, 83 சதவீதம் சரிவடைந்துள்ளது.சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 7.39 லட்சம் டன்னிலிருந்து, 10.49 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|