தாவர எண்ணெய் இறக்குமதி 92 லட்சம் டன்னாக உயர்ந்ததுதாவர எண்ணெய் இறக்குமதி 92 லட்சம் டன்னாக உயர்ந்தது ... விரிவாக்க திட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் விரிவாக்க திட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பரஸ்பர நிதி திட்டத்தில் இருந்து வெளியேறும் கட்டணம் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2012
00:08

புதுடில்லி: பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, குறுகிய காலத்தில் முதலீடுகள் திரும்ப பெறப்படுவதை குறைக்க, பரஸ்பர நிதி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதையடுத்து, பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து வெளியேறுவதற்கான கட்டணங்களை, ஒரு சில நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. மத்திய அரசு, அண்மையில் அறிவித்த நிதி சீர்திருத்த திட்டங்களால், இந்திய பங்குச் சந்தை ஓரளவு எழுச்சி கண்டுள்ளது. இதை பயன்படுத்தி, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, அதிக அளவிலான முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக, சென்ற செப்டம்பரில், மேற்கண்ட திட்டங்களில் இருந்து, 3,559 கோடி ரூபாயை, முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.
இதையடுத்து, ஜே.பி.,மார்கன் எம்.எப்., ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல், ஆக்சிஸ் எம்.எப்., ஆகிய பரஸ்பர நிதி நிறுவனங்கள், திட்டங்களில் இருந்து வெளியேறுவதற்கான கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளன.மேலும், பல நிறுவனங்கள், கட்டண சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன. ஜே.பி.மார்கன் எம்.எப். நிறுவனம், அதன் ஐந்து திட்டங்களுக்கான வெளியேற்றுக் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, யூனிட் ஒதுக்கீடு செய்ததில் இருந்து ஆறு மாதங்களுக்குள், அவற்றை விற்பனை செய்தால் மூன்று சதவீத வெளியேற்றுக் கட்டணம் வசூலிக்கப்படும். இது, ஓராண்டு வரையிலான காலத்திற்கு இரண்டு சதவீதமாகவும், அதற்கு மேற்பட்ட காலத்திற்கு ஒரு சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் எம்.எப்., நிறுவனம், அதன் புருடென்ஷியல் ஈக்யுட்டி, புருடென்ஷியல் டிஸ்கவரி பண்டு உள்ளிட்ட திட்டங்களில், ஆறு மாதத்திற்குள் வெளியேறினால் மூன்று சதவீத கட்டணம் வசூலிக்கிறது. ஆறு முதல் ஒன்றரை ஆண்டுகளில், யூனிட்டுகளை விற்றால், இரண்டு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு மேற்பட்ட காலத்திற்கு, வெளியேறும் கட்டணம் கிடையாது.ஓராண்டிற்குள் யூனிட்டுகளை விற்றால், வெளியேறும் கட்டணமாக, ஒரு சதவீதத்தை வசூலித்து வந்த ஆக்சிஸ் எம்.எப்., நிறுவனம், தற்போது, ஆறு மாதத்திற்குள் யூனிட்டுகளை விற்றால், 3 சதவீத கட்டணத்தை வசூலிக்கிறது. இது, ஆறு முதல் ஓராண்டு காலம் வரையில் யூனிட்டுகளை விற்றால், 2 சதவீதமாகவும், ஓராண்டில் இருந்து, இரண்டு ஆண்டுகள் வரையிலான முதலீட்டிற்கு, ஒரு சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)