தாவர எண்ணெய் இறக்குமதி 92 லட்சம் டன்னாக உயர்ந்ததுதாவர எண்ணெய் இறக்குமதி 92 லட்சம் டன்னாக உயர்ந்தது ... "பிரிமியம்' வகை பெட்ரோல், டீசல் உற்பத்தி நிறுத்தப்பட்டது "பிரிமியம்' வகை பெட்ரோல், டீசல் உற்பத்தி நிறுத்தப்பட்டது ...
விரிவாக்க திட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2012
00:10

புதுடில்லி: பொதுத் துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், அவற்றின் சுத்திகரிப்பு திறனை உயர்த்திக் கொள்ளும் நோக்கில், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அதன் எண்ணெய் சுத்திகரிப்பு திறனை, 36.5 சதவீதம் உயர்த்தி, ஆண்டுக்கு, 7.40 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி, இந்நிறுவனம், அதன் கோயாலி சுத்திகரிப்பு பிரிவின் உற்பத்தி திறனை, 1.37 கோடி டன்னில் இருந்து, 1.80 கோடி டன்னாக உயர்த்த உள்ளது. இத்துடன், ஒடிசாவின் பரதீப்பில், புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை, 1.50 கோடி டன் சுத்திகரிப்பு திறன் கொண்டதாக இருக்கும்.இந்துஸ்தான் பெட்ரோலியம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், அதன் மும்பை ஆலையின் சுத்திகரிப்பு திறனை, 65 லட்சம் டன்னில் இருந்து, 82 லட்சம் டன்னாக அதிகரிக்க உள்ளது. மேலும், இந்நிறுவனம், அதன் விசாகப்பட்டினம் பிரிவின், எண்ணெய் சுத்திகரிப்பு திறனை,
83 லட்சம் டன்னில் இருந்து 90 லட்சம் டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.இதே போன்று, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும், விரிவாக்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இந்நிறுவனம், அதன் மும்பை ஆலையின் சுத்திகரிப்பு திறனை, 1.20 கோடி டன்னில் இருந்து, 1.35 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், கொச்சி பிரிவின் சுத்திகரிப்பு திறனும், 95 லட்சம் டன்னில் இருந்து, 1.55 கோடி டன்னாக உயர்த்தப்பட உள்ளது.
மங்களூர் ரிபைனரி அண்டு பெட்ரோகெமிக்கல் நிறுவனம், அதன் எண்ணெய் சுத்திகரிப்பு திறனை, 1.50 கோடி டன்னில் இருந்து, 1.65 கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.தனியார் துறையை பொறுத்தவரை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அடுத்த 4 - 5 ஆண்டுகளில், அதன் குழும லாபத்தை இரு மடங்காக அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இதற்காக, 1,200 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எஸ்ஸார் ஆயில் நிறுவனம், குஜராத்தில் உள்ள அதன் எண்ணெய் ஆலையின், சுத்திகரிப்பு திறனை, வரும் 2015-16ம் நிதியாண்டிற்குள் ஆண்டுக்கு, 3.08 கோடி டன்னாக உயர்த்த உள்ளது. இந்நிறுவனத்தின் சுத்திகரிப்பு திறன், தற்போது, 1.80 கோடி டன்னாக காணப்படுகிறது.நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், கடலூரில் அமைத்து வரும் அதன் சுத்திகரிப்பு ஆலையை, வரும் 2016ம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள் திறக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையின் சுத்திகரிப்பு திறன், துவக்கத்தில், 61 லட்சம் டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில், 25 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் சுத்திகரிப்பு திறன், 21.50 கோடி டன்னாக உள்ளது. இது, வரும் 2015-16ம் நிதியாண்டில், 26.50 கோடி டன்னாக உயரும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)