பதிவு செய்த நாள்
16 அக்2012
00:13
புதுடில்லி: நடப்பு 2012-13ம் சந்தைப்பருவத்தில் (அக்.,- செப்.,), பொது உரிம அடிப்படையில் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி, மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார்.உள்நாட்டிற்கான தேவையை விட, சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும் என்ற மதிப்பீடு காரணமாகவே, அதன் ஏற்றுமதி, ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.நடப்பாண்டு மே மாதம், பொது உரிம அடிப்படையில், சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது, சென்ற செப்டம்பர் மாதத்துடன், காலாவதியானதை தொடர்ந்து, தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாட்டின் சர்க்கரை உற்பத்தி, சென்ற செப்டம்பருடன் முடிந்த, சந்தைப் பருவத்தில், 2.30 - 2.35 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய பருவத்தில், 2.60 கோடி டன்னாக இருந்தது.உலகில், சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு 2.20 கோடி டன் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. சென்ற சந்தைப்பருவத்தில், 35 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|