பதிவு செய்த நாள்
16 அக்2012
00:17
மும்பை: நாட்டின், பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான, திங்கட் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. நாட்டின், பணவீக்கம் அதிகரித்துள்ளது என்ற செய்தியால், குறிப்பிட்ட சில துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை, குறைந்திருந்தது.இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவில், சில்லரை விற்பனையும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியும் நன்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.மேலும், சீனாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளதும், அந்நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளதும், ஒட்டுமொத்த அளவில், சர்வதேச பங்கு வர்த்தகத்திற்கு, வலுச் சேர்ப்பதாக அமைந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்பொருட்கள், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு ஆகிய துறைகளைச் சேர்ந்தநிறுவன பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 38.37 புள்ளிகள் உயர்ந்து, 18,713.55 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,726.38 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,596.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 11.20 புள்ளிகள் அதிகரித்து, 5,687.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,693.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,651.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|