பதிவு செய்த நாள்
16 அக்2012
17:48
புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி சுஸுகி மேலாண் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சின்ஷோ நகனிஷி டில்லியில் நடந்த விழாவில் இன்று அறிமுகம் செய்து வைத்தார். குறைந்த விலை, அதிக மைலேஜ் என வாடிக்கையாளர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் விதமாக புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி வடிவமைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகால முயற்சியில் 200 எஞ்சினியர்களின் உழைப்பில் புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி உருவாக்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் தலா 3 வேரியண்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பில் முற்றிலும் புதிதாக வந்திருக்கும் புதிய ஆல்ட்டோ 800 காரை அறிமுகப்படுத்திய பின் பேசிய மாருதி சுஸுகி தலைமை செயல் அதிகாரி சின்ஷோ நகனிஷி கூறுகையில், "கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆல்ட்டோ கார் தொடர்ந்து இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை தக்க வைத்து வருகிறது. இதை தக்க வைக்கும் விதத்தில் அதிக மைலேஜ், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு என வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் புதிய ஆல்ட்டோ காரை அறிமுகம் செய்துள்ளோம். புதிய ஆல்ட்டோ காரும் நிச்சயம் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதோடு, தனது மார்க்கெட்டை தொடர்ந்து தக்க வைக்கும். இதுவரை புதிய ஆல்ட்டோ 800 காருக்கு 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்," என்றார். பெட்ரோல் வேரியண்ட்கள் ஸ்டான்டர்டு கார் ரூ.2.44 லட்சம், எல்எக்ஸ் கார் ரூ.2.76 லட்சம், எல்எக்ஸ்ஐ கார் ரூ.2.99 லட்சம் எனவும், சிஎன்ஜி வேரியண்ட்கள் ஸ்டான்டர்டு கார் ரூ.3.19 லட்சம், எல்எக்ஸ் கார் ரூ.3.37 லட்சம் எல்எக்ஸ்ஐ கார் ரூ.3.70 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|