பதிவு செய்த நாள்
17 அக்2012
00:48
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 2.17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், வசூலிக்கப்பட்ட தொகையை விட, 15.6 சதவீதம் அதிகம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், கலால் வரி வசூல், 80 ஆயிரம் கோடி ரூபாயாகவும், சுங்க வரி வசூல், 77 ஆயிரம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. சேவை வரி வசூல், 60 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வாயிலாக, 5.05 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட, 27 சதவீதம் அதிகமாகும்.சென்ற செப்டம்பர் மாதத்தில், மறைமுக வரி வசூல், முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தை விட, 19 சதவீதம் வளர்ச்சிகண்டு, 22 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், கலால் வரி மூலம், 8,000 கோடி ரூபாயும், சுங்க வரி வாயிலாக, 8,110 கோடி ரூபாயும், சேவை வரி மூலம், 5,890 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|