பதிவு செய்த நாள்
17 அக்2012
00:55
புதுடில்லி: புள்ளி விவர பிரச்னையால்,இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டீ.பி.,) சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.,), குறைத்து மதிப்பிட்டுள்ளதாக, திட்டக் குழுவின்துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.நடப்பு 2012ம் ஆண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 4.9 சதவீதமாக இருக்கும் என, சர்வதேச நிதியம், அண்மையில் மறு மதிப்பீடு செய்திருந்தது. இது, முன்பு 6.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது.இது குறித்து, டில்லியில் மான்டேக் சிங் அலுவாலியா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஐ.எம்.எப்., குறைத்து மதிப்பிட்டுள்ளதற்கு, புள்ளி விவர பிரச்னை தான் காரணம் என, நினைக்கிறேன்.ஐ.எம்.எப்., சந்தை விலையின் அடிப்படையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிட்டுள்ளது. ஆனால், இந்திய ஆய்வு நிறுவனங்கள், உற்பத்தி விலையின் அடிப்படையில், நாட்டின் வளர்ச்சியை மதிப்பீடு செய்கின்றன.
சந்தை விலையில், மறைமுக வரிகளும் அடங்கியுள்ளன. ஆனால், உற்பத்தி விலையில், அவை சேர்க்கப்படமாட்டாது. இந்த மிகச் சிறிய வேறுபாட்டை, ஐ.எம்.எப்., அறிந்திருக்கும்.நடப்பாண்டின் முதல் அரையாண்டு காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு மான்டேக் சிங் தெரிவித்தார். சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், ஜி.டீ.பி., வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என, மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|