பதிவு செய்த நாள்
17 அக்2012
00:56
சென்னை: உள்நாட்டில், டிராக்டர் விற்பனை, ஒட்டு மொத்த அளவில், ஆண்டுக்கு, 20 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, தற்போது, 5 லட்சம் என்ற அளவில் உள்ள டிராக்டர் விற்பனை, வரும் 2015ம் ஆண்டிற்குள், 8.6 லட்சத்தை தாண்டும் என, "அசோசெம்' மதிப்பீடு செய்துள்ளது.நாட்டின் ஒட்டு மொத்த டிராக்டர் விற்பனையில், பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் பங்களிப்பு, 55 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதற்கு அடுத்தாற்போல், மேற்கு மாநிலங்கள் ( 24 சதவீதம்), தென் மாநிலங்கள் (15 சதவீதம்), கிழக்கு மாநிலங்கள் (6 சதவீதம்) உள்ளன.சர்வதேச அளவில், டிராக்டர் தயாரிப்பில், மூன்றில், ஒரு சதவீத பங்களிப்பை கொண்டு, இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.
உள்நாட்டில் டிராக்டர் தயாரிப்பில், நாடு தழுவிய அளவில், 13 நிறுவனங்களும், மண்டல அளவில் சில நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.டிராக்டர் விற்பனையில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், 40 சதவீத பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, டாபே (23 சதவீதம்), எஸ்கார்ட்ஸ் (13 சதவீதம்), எல் அண்டு டி- ஜான் டியர் (10 சதவீதம்) நிறுவனங்கள் உள்ளன.டிராக்டரின் சராசரி பயன்பாடு, 10-12 ஆண்டுகள் என்ற நிலையிலிருந்து, ஒன்பது ஆண்டுகளாக குறைந்து உள்ளது. இதையடுத்து, பழைய டிராக்டரை கொடுத்து, புதிய டிராக்டரை வாங்குவது அதிகரித்து வருகிறது. உள்நாட்டு விற்பனையில், இவ்வகை டிராக்டர் களின் பங்களிப்பு, 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது.உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்பில், 31 முதல் 42 குதிரைத் திறன் கொண்ட நடுத்தர வகை டிராக்டர்களின் பங்களிப்பு, 42 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எனினும், உயர் மற்றும் குறைந்த குதிரைத் திறன் கொண்ட டிராக்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது என, "அசோசெம்' அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|