பதிவு செய்த நாள்
17 அக்2012
00:57
புதுடில்லி: வரும் 2015ம் ஆண்டில், இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான, பரஸ்பர வர்த்தகம், 2,000 கோடி டாலரை (1.10 லட்சம் கோடி ரூபாய்) எட்டும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. ரஷ்ய நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையே, மோட்டார் வாகனம், அணு உலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், மருந்து, பொறியியல் சாதனங்கள் உள்ளிட்டவற்றின் மீது வர்த்தகம் நடைபெற்று வருகிறது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 640 கோடி டாலர் (35,200 கோடி டாலர்) என்ற அளவில் இருந்தது. இதை வரும், 2015ம் ஆண்டில், 2,000 கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|