பதிவு செய்த நாள்
17 அக்2012
11:41
புதுடில்லி: டில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த விமான நிலைய வளர்ச்சி கட்டணம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங் தெரிவித்துள்ளார். இதுவரை டில்லி விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு ரூ. 200ம், வெளிநாட்டு பயணிகளுக்கு 1300ம், மும்பை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு முறையே, ரூ. 100 மற்றும் ரூ. 600ம் வசூலிக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டில்லி விமான நிலையத்தை பராமரித்து வரும் ஜி.எம்.ஆர்., நிறுவனம், மத்திய அமைச்சரின் இந்த முடிவு குறித்து கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. எனினும், மத்திய அமைச்சரின் இந்த உத்தரவை அமல்படுத்த, விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி தேவை என்று மட்டும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|