பதிவு செய்த நாள்
17 அக்2012
15:55
ஜப்பானை சேர்ந்த, டொயோட்டா கார் நிறுவனம், இந்தியாவில், கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து, "டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், இந்தியாவில், விற்பனை செய்யப்பட்ட, 8,700 கரோலா அல்டீஸ் மற்றும் காம்ரே மாடல் கார்களில், பழுது நீக்கும் நடவடிக்கையை, அடுத்த மாதம் முதல் மேற்கொள்ள உள்ளது. கடந்த, 2008ம் ஆண்டு, ஜூலை, 30ம் தேதி முதல், டிசம்பர், 31ம் தேதி வரை, உற்பத்தி செய்யப்பட்ட, கரோலா அல்டீஸ் கார்களிலும், கடந்த, 2006ம் ஆண்டு, செப்டம்பர்,1ம் தேதி முதல், 2008ம் ஆண்டு, ஜூலை, 31ம் தேதி வரை, உற்பத்தி செய்யப்பட்ட காம்ரே கார்களிலும், பவர் விண்டோ சுவிட்ச்களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. இந்த பழுதை தான், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் நீக்க உள்ளது. நவம்பர் மாதம் முதல், இந்த பழுது நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கால கட்டத்தில், குறிப்பிட்ட இரண்டு மாடல் கார்களை வாங்கியவர்கள், அருகில் உள்ள டீலர்களை தொடர்பு கொண்டால், ஒரு மணி நேரத்தில் பழுது நீக்கப்படும். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|