பதிவு செய்த நாள்
18 அக்2012
01:24
மதுரை:தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில், உணவுப்பொருட்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. தீபாவளியின்போது இன்னும் விலை அதிகரிக்கும்.தீபாவளிக்காக இனிப்பு, பலகாரங்களுக்கு இப்போதே ஆர்டர்கள் குவிகின்றன. தீபாவளி அன்று உடலுக்கு நல்லெண்ணெயும், உணவுக்கு சூரியகாந்தி எண்ணெயும் கட்டாயம்.
இதன் வரத்து சீராக இருந்தாலும், மின்வெட்டு, மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி "செயற்கையாக' விலை உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த தீபாவளி அன்று, 124 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் நல்லெண்ணெய், தற்போது, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தும்பை நல்லெண்ணெய், 135 ரூபாயிலிருந்து, 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய், 79 ரூபாயிலிருந்து, 82 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அடுத்ததாக, பருப்பு வகைகள் வடைக்கும், ஈரல் கூட்டுக்கும், சில இனிப்பு வகைகளுக்கும் பயன்படுத்தப்படும் கடலை பருப்பின் விலை, கடந்தாண்டு தீபாவளியின் போது, ஒரு கிலோ 40 ரூபாயாக இருந்தது. நடப்பாண்டு வரத்து சீராக இருந்தாலும், தீபாவளியை முன்னிட்டு, இதன் விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், கிலோ, 62 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடலை பருப்பு, தற்போது, 65 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பருப்பு வகைகளின் வியாபாரிகள் சங்கச் செயலர் வெற்றிச்செல்வன் கூறுகையில், "மழையின்மையால் உற்பத்தி பாதித்துள்ளது. கறுப்பு கடலைக்கு விலை குறைவாக கிடைக்கும் என்பதால், வெள்ளை நிற கடலையை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதும் காரணம்' என்றார்.
இனிப்பு மற்றும் இறைச்சி உணவுகளுக்கு பயன்படுத்தப்படும், ஒரு சில நறுமணப் பொருட்களின் விலையும் கிலோவிற்கு, 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. "தீபாவளி நெருங்கும் சமயத்தில் இன்னும் விலை அதிகரிக்கும்' என வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.தற்போது, கீழமாசி வீதி பலசரக்கு கடைகளில், ஒரு கிலோ மஞ்சள் தூள், 120 ரூபாய்க்கும், மல்லி பொடி, 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆட்டுக்கறி விலையை பொறுத்தவரை, பெரும்பாலான கடைகளில், தற்போது கிலோ, 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் விலை, தீபாவளியின்போது, மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|