தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... பால் பொருட்கள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு நீங்குகிறது பால் பொருட்கள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு நீங்குகிறது ...
உணவு பொருட்களின் விலை "விர்...'தீபாவளிக்கு மேலும் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2012
01:24

மதுரை:தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில், உணவுப்பொருட்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. தீபாவளியின்போது இன்னும் விலை அதிகரிக்கும்.தீபாவளிக்காக இனிப்பு, பலகாரங்களுக்கு இப்போதே ஆர்டர்கள் குவிகின்றன. தீபாவளி அன்று உடலுக்கு நல்லெண்ணெயும், உணவுக்கு சூரியகாந்தி எண்ணெயும் கட்டாயம்.
இதன் வரத்து சீராக இருந்தாலும், மின்வெட்டு, மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி "செயற்கையாக' விலை உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த தீபாவளி அன்று, 124 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் நல்லெண்ணெய், தற்போது, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தும்பை நல்லெண்ணெய், 135 ரூபாயிலிருந்து, 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய், 79 ரூபாயிலிருந்து, 82 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அடுத்ததாக, பருப்பு வகைகள் வடைக்கும், ஈரல் கூட்டுக்கும், சில இனிப்பு வகைகளுக்கும் பயன்படுத்தப்படும் கடலை பருப்பின் விலை, கடந்தாண்டு தீபாவளியின் போது, ஒரு கிலோ 40 ரூபாயாக இருந்தது. நடப்பாண்டு வரத்து சீராக இருந்தாலும், தீபாவளியை முன்னிட்டு, இதன் விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், கிலோ, 62 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடலை பருப்பு, தற்போது, 65 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பருப்பு வகைகளின் வியாபாரிகள் சங்கச் செயலர் வெற்றிச்செல்வன் கூறுகையில், "மழையின்மையால் உற்பத்தி பாதித்துள்ளது. கறுப்பு கடலைக்கு விலை குறைவாக கிடைக்கும் என்பதால், வெள்ளை நிற கடலையை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதும் காரணம்' என்றார்.
இனிப்பு மற்றும் இறைச்சி உணவுகளுக்கு பயன்படுத்தப்படும், ஒரு சில நறுமணப் பொருட்களின் விலையும் கிலோவிற்கு, 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. "தீபாவளி நெருங்கும் சமயத்தில் இன்னும் விலை அதிகரிக்கும்' என வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.தற்போது, கீழமாசி வீதி பலசரக்கு கடைகளில், ஒரு கிலோ மஞ்சள் தூள், 120 ரூபாய்க்கும், மல்லி பொடி, 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆட்டுக்கறி விலையை பொறுத்தவரை, பெரும்பாலான கடைகளில், தற்போது கிலோ, 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் விலை, தீபாவளியின்போது, மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)