பதிவு செய்த நாள்
18 அக்2012
01:26
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், புதன் கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை, சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதை அடுத்து, மதியத்திற்கு பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
ஸ்பெயின் நாட்டிற்கான முதலீட்டு கடன் தகுதி மதிப்பீட்டை, மூடீஸ் நிறுவனம் குறைக்காதது, அமெரிக்காவில் வீடு, கட்டுமான துறைகளின் வளர்ச்சி குறித்த அறிக்கையின் எதிர்பார்ப்பு போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம், பொறியியல் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 33.07 புள்ளிகள் அதிகரித்து, 18,610.77 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,705.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,535.37 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 18 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 12.25 புள்ளிகள் உயர்ந்து, 5,660.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|