பதிவு செய்த நாள்
18 அக்2012
11:22
புதுடில்லி : விமானங்களை இயக்கும் செலவு அதிகரித்துள்ளதால், வரவிருக்கும் குளிர் காலத்தில், குறைவான விமானங்களையே இயக்க, பெரிய விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இம்மாதம், 31ம் தேதி முதல், அடுத்த வருடம் மார்ச் வரை, குளிர் காலமாக, விமான நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன. இந்த காலத்தில், விமானங்களை இயக்குவதற்கு, கூடுதல் செலவாகும் என, விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இவ்வாண்டில், விமானங்களை இயக்குவதற்கான செலவுகள், முந்தைய ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்துள்ளதால், 19 சதவீதம் அளவிற்கு, சேவைகளை குறைத்துக் கொள்ள, விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்காக, அந்த நிறுவனங்கள், இந்திய விமான கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் அனுமதி பெற்றுள்ளன. கடந்த குளிர்காலத்தில், 14 ஆயிரம் விமான புறப்பாடுகள் இருந்த நிலையில், வரும் குளிர் காலத்தில், 11 ஆயிரம் புறப்பாடுகளுக்கே அனுமதி பெறப்பட்டுள்ளன. ஆனால், பெரிய விமான நிறுவனங்களான, ஏர் - இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்றவை, விமான சேவைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், குறைந்த விலை மற்றும் வசதிகள் குறைந்த, விமான நிறுவனங்களான இண்டிகோ, கோ ஏர் போன்றவை, சேவைகளை அதிகரிக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|