பதிவு செய்த நாள்
19 அக்2012
01:12
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -எண்ணூர் துறைமுகம், அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக, 1,000 கோடி ரூபாய் திரட்டுவதற்காக, வரி விலக்கு சலுகை கொண்ட கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது.இது குறித்து எண்ணூர் போர்ட் நிறுவனத்தின் தலைவர் எஸ்.வேலுமணி கூறியதாவது:மத்தியஅரசின் அனுமதி கிடைத்ததும் கடன்பத்திரங்கள் வெளியிடப்படும்.
கட்டமைப்பு வசதிகள்திரட்டப்பட உள்ள நிதியின் மூலம், துறைமுக போக்குவரத்து, சரக்கு கையாளுதல் உள்ளிட்டவற்றுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.இதில், கப்பல் தளம் அமைத்தல், இயற்கை எரிவாயு மற்றும் கார் முனையங்கள் ஏற்படுத்துதல், துரப்பணப் பணி உள்ளிட்டவைகள் அடங்கும்.1,407 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு பெட்டக முனையம் அமைக்க, மறு ஒப்பந்தப் புள்ளிகள் கோருவது குறித்து முடிவெடுக்கப்படும்.கார் ஏற்றுமதி தொடர்பாக, நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 110 கோடி ரூபாய் செலவில், ஐரோப்பிய நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதற்கான முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இது, 8,000 கார்களை நிறுத்தும் வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.பெரிய கப்பல்களை நிறுத்துவதற்காக, 170 கோடி ரூபாய் செலவில், துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இது, வரும் 2013ம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள் முடிந்து விடும். இத்திட்டத்தின் கீழ், துறைமுகத்தில், கப்பல் நிறுத்துமிடத்தின் ஆழம், தற்போதைய, 16 மீட்டரில் இருந்து, 18 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.விரிவாக்கத் திட்டங்களின் மூலம், வரும் 2020ம் ஆண்டில், துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன், 9 கோடி டன்னாக அதிகரிக்கும். சென்ற 2011-12ம் நிதியாண்டில், துறைமுகம் 1.49 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இவ்வாறு வேலுமணி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|