சர்க்கரை இறக்குமதி வரியை 20 சதவீதமாக உயர்த்த திட்டம்சர்க்கரை இறக்குமதி வரியை 20 சதவீதமாக உயர்த்த திட்டம் ... மத்திய பட்ஜெட் மதிப்பீட்டை விட உணவு மானியம் உயர்ந்தது மத்திய பட்ஜெட் மதிப்பீட்டை விட உணவு மானியம் உயர்ந்தது ...
எண்ணூர் துறைமுகம் கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ.1,000 கோடி திரட்டுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2012
01:12

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -எண்ணூர் துறைமுகம், அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக, 1,000 கோடி ரூபாய் திரட்டுவதற்காக, வரி விலக்கு சலுகை கொண்ட கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது.இது குறித்து எண்ணூர் போர்ட் நிறுவனத்தின் தலைவர் எஸ்.வேலுமணி கூறியதாவது:மத்தியஅரசின் அனுமதி கிடைத்ததும் கடன்பத்திரங்கள் வெளியிடப்படும்.
கட்டமைப்பு வசதிகள்திரட்டப்பட உள்ள நிதியின் மூலம், துறைமுக போக்குவரத்து, சரக்கு கையாளுதல் உள்ளிட்டவற்றுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.இதில், கப்பல் தளம் அமைத்தல், இயற்கை எரிவாயு மற்றும் கார் முனையங்கள் ஏற்படுத்துதல், துரப்பணப் பணி உள்ளிட்டவைகள் அடங்கும்.1,407 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு பெட்டக முனையம் அமைக்க, மறு ஒப்பந்தப் புள்ளிகள் கோருவது குறித்து முடிவெடுக்கப்படும்.கார் ஏற்றுமதி தொடர்பாக, நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 110 கோடி ரூபாய் செலவில், ஐரோப்பிய நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதற்கான முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இது, 8,000 கார்களை நிறுத்தும் வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.பெரிய கப்பல்களை நிறுத்துவதற்காக, 170 கோடி ரூபாய் செலவில், துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இது, வரும் 2013ம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள் முடிந்து விடும். இத்திட்டத்தின் கீழ், துறைமுகத்தில், கப்பல் நிறுத்துமிடத்தின் ஆழம், தற்போதைய, 16 மீட்டரில் இருந்து, 18 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.விரிவாக்கத் திட்டங்களின் மூலம், வரும் 2020ம் ஆண்டில், துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன், 9 கோடி டன்னாக அதிகரிக்கும். சென்ற 2011-12ம் நிதியாண்டில், துறைமுகம் 1.49 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இவ்வாறு வேலுமணி தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)