நாட்டின் எள் உற்பத்தி 2.71 லட்சம் டன்னாக குறையும்நாட்டின் எள் உற்பத்தி 2.71 லட்சம் டன்னாக குறையும் ... உற்பத்தி செலவு உயர்வால் தேயிலை துறையில் பாதிப்பு உற்பத்தி செலவு உயர்வால் தேயிலை துறையில் பாதிப்பு ...
"சென்செக்ஸ்' 181 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2012
01:16

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததை அடுத்து, மதியத்திற்கு பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது.சீனாவின் மூன்றாவது காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி, நிபுணர்களின் மதிப்பீட்டை ஒட்டி அமைந்தது மற்றும் அமெரிக்காவில் வீடுகள் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. இருப்பினும், ஆரோக்ய பராமரிப்பு துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 181.16 புள்ளிகள் அதிகரித்து, 18,791.93 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 18,806.56 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,576.41 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், டாட்டா பவர், எஸ்.பீ.ஐ., டி.சி.எஸ்., உள்ளிட்ட 24 நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்தும், விப்ரோ, சன்பார்மா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 6 நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்தும் காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 58.45 புள்ளிகள் உயர்ந்து, 5,718.70 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,722.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,650.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)