பதிவு செய்த நாள்
20 அக்2012
00:54
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், சென்ற செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், இந்திய ரயில்வேயின் சரக்கு கட்டண வருவாய், 25.43 சதவீதம் உயர்ந்து, 39,889 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 31,802 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், கையாளப்பட்ட சரக்கு அளவு, 46 கோடி டன்னில் இருந்து, 48.10 கோடி டன்னாக அதிகரித்துஉள்ளது. ரயில்வே துறை,சென்ற செப்டம்பரில், சரக்கு கட்டணம் வாயிலாக, 6,041 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதில், 3.60 கோடி டன் நிலக்கரியை கையாண்ட வகையில் மட்டும், 2,509 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதே மாதத்தில், 82 லட்சம் டன் இரும்புத் தாது மூலம், 518 கோடி ரூபாயும், 80 லட்சம் சிமென்ட் வாயிலாக, 575கோடி ரூபாயும், சரக்கு போக்குவரத்து கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், 35 லட்சம் டன் உணவு தானியங்களை கையாண்ட வகையில், 488 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக, ரயில்வே துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|