தொடர்ந்து சரியும் ஜி.எஸ்.எம். பயன்பாடுதொடர்ந்து சரியும் ஜி.எஸ்.எம். பயன்பாடு ... நாட்டின் நெல் கொள்முதல் 3.50 கோடி டன்னாக உயர்வு நாட்டின் நெல் கொள்முதல் 3.50 கோடி டன்னாக உயர்வு ...
இலவச "பாலியஸ்டர்' ரக சேலைகளுக்கு மவுசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2012
00:43

ஈரோடு:வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்து, தமிழகத்தில் வழங்கப்படும் விலையில்லா பாலியஸ்டர் ரக சேலைகளை, உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகை:தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா, வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. கூட்டுறவு விசைத்தறி நெசவாளர்கள் சங்கம் மூலம், விலையில்லா சேலை உற்பத்தி நடக்கிறது.கடந்த, 2011ல் சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தலின்போது, அரசு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள தடை இருந்ததால், 2012ம் ஆண்டுக்கான, விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி பணி நடக்கவில்லை.பழைய கையிருப்புடன், கூடுதலாக தேவைப்பட்ட, 1.14 கோடி வேட்டி, 1.07 கோடி சேலை ஆகியவை வெளி மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
கொள்முதல்:உள்ளூர் சங்கத்தில் உற்பத்தி செய்தபோது, 127.8 ரூபாய்க்கு சேலையும், 93.65 ரூபாய்க்கு வேட்டியும் கொள்முதல் செய்யப்பட்டன.அதே சமயம், இவை, வெளி மாநிலத் திலி ருந்து முறையே, 117 மற்றும், 92 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டன.நடப்பு 2012ம் ஆண்டுக் கான, வேட்டி, சேலை வினியோகிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. வெளிமாநில வேட்டி யின் தரம் குறைந்திருந்தாலும், இலவச சேலை, பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வழக்கமாக தலா, 50 சதவீதம் பருத்தி, பாலியஸ்டர் கலந்து உள்ளூரில், விலையில்லா சேலைகள் தயாரிக்கப் படுகின்றன.வெளிமாநிலத்தில், முழுவதும் பாலியஸ்டரால் தயார் செய்யப்பட்டு, "சில்க்' சேலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.எடுப்பான தோற்றம்:வழக்கமாக வழங்கும் சேலையை விட, இவை எடுப்பான தோற்றம் தருவதால், பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.இனிவரும் காலங் களிலும் இதேபோன்ற, சேலைகளையே வழங்க வேண்டுமென, பெண்கள் எதிர்பார்க்கின் றனர்.
இந்நிலையில், வழக்கம் போல் உள்ளூர் சங்கங்கள் மூலமே, வரும் ஆண்டிற்கான 1.25 கோடி வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யும் பணி, நடந்து முடியும் நிலையில் உள்ளது. மீண்டும் பழைய மாதிரியான சேலைகளே வழங்கப்படும் என்ற தகவலால், பெண்கள் ஏமாற்றம் அடைந்துள் ளனர்.தற்போதைய உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுமென்பதால், 27.50 லட்சம் சேலை, 66 லட்சம் வேட்டி ஆகியவற்றை, வெளி மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்ய, முதல்வரிடம்ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதனால், 27.5 லட்சம் பேருக்கு மட்டுமே, "சில்க்' சேலை கிடைக்க வாய்ப்புள்ளது.ஒரு சில பகுதி களில் மட்டும், இதுபோன்ற, "சில்க்' சேலைகளை வழங்கி, மற்ற இடங்களில் வழங்காவிட்டால், அதிருப்தி ஏற்படும்.
தொழில் வாய்ப்பு:எனவே, இனிவரும் காலங்களில் தமிழக பெண்களை மகிழ்ச்சிப் படுத்தவும், உள்ளூர் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொழில் வாய்ப்பளிக்கும் வகையிலும், வெளி மாநிலங்களில் தயாராகும், "சில்க்' ரக சேலைகளை, உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)