பதிவு செய்த நாள்
25 அக்2012
00:47
புதுடில்லி:அண்மையில் முடிவடைந்த, 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,-செப்.,), மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து, 3.50 கோடி டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய வேளாண் பருவத்தில், 3.42 கோடி டன்னாக இருந்தது.
சட்டீஸ்கர் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில், இதன் உற்பத்தி எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, நெல் கொள்முதல் சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஒட்டு மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மட்டும், அதிகபட்சமாக 77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திரா ( 75 லட்சம் டன்), சட்டீஸ்கர் (41.10 லட்சம் டன்), உத்தர பிரதேசம் ( 33.50 லட்சம் டன்) மற்றும் ஒடிசா ( 28.40 லட்சம் டன்) ஆகியவை உள்ளன.
மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில முகமை அமைப்புகள் வாயிலாக நெல் கொள்முதல் செய்து வருகிறது.மேலும், இது, விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|