நாட்டின் நெல் கொள்முதல் 3.50 கோடி டன்னாக உயர்வுநாட்டின் நெல் கொள்முதல் 3.50 கோடி டன்னாக உயர்வு ... பல முனை தாக்குதலால் "பிளைவுட்'  தொழில் பாதிப்பு பல முனை தாக்குதலால் "பிளைவுட்' தொழில் பாதிப்பு ...
"கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' ஊழியர்கள் பிடிவாதம்:ஊதியம் வழங்க நாளை வரை கெடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2012
00:50

புதுடில்லி:ஊதிய நிலுவை தொடர்பாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் திட்டத்தை அதன் ஊழியர்கள் ஏற்க மறுத்து விட்டனர். நாளைக்குள் நான்குமாத ஊதியத்தை மொத்தமாக வழங்க வேண்டும் என, அவர்கள் "கெடு' விதித்துள்ளனர்.
கடன்சுமை:விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு மற்றும் 7,524 கோடி ரூபாய் கடன் சுமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.இந் நிலையில், கடந்த ஏழு மாத ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி இந்நிறுவனத்தின் விமானிகள்,பொறியாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் ஊழியர்கள் சென்ற செப்டம்பர் 29ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, அடிக்கடி விமான சேவையை ரத்து செய்து பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்காக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை உரிமத்தை விமான போக்குவரத்து இயக்குனரகம் தற்காலிகமாக ரத்து செய்தது.
இந்நிலையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால், ஊழியர் களுக்கு முதற்கட்டமாக மூன்று மாத ஊதியம் வழங்கப்படும் என, மின்னஞ்சல் அனுப்பினார். இதனை ஏற்றுக் கொள்வதாக, மும்பையை சேர்ந்த ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சஞ்சய் அகர்வால் நேற்று, ஊழியர்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் அனுப்பினார்.
மூன்று மாத ஊதியம் : அதில், பெரும்பாலான விமானிகளும், பொறியாளர்களும் நிறுவனம், முதற் கட்டமாக மூன்று மாத ஊதியம் வழங்கும் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, வரும் 26ம் தேதி பணிக்கு திரும்ப உள்ளதற்கு, அவர் நன்றி தெரிவித்திருந்தார்.நல்லெண்ண அடையாளமாக, அனைத்து ஊழியர்களுக்கும் அக்டோபர் மாத ஊதியம் முழுமையாக வழங்கப்படும் என்றும், டிசம்பர் மாத ஊதியம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே வழங்கப்படும் எனவும், அவர் கூறியுள்ளார்.
ஆனால், இதை ஏற்க முடியாது என்றும், நான்கு மாத ஊதியத்தை, நாளை (வெள்ளிக்கிழமை) ஆறு மணிக்குள் வழங்கினால் மட்டுமே, பணிக்கு திரும்புவோம் எனவும், டில்லி பிரிவு போராட்ட குழு தலைவர் சுபாஷ் சந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை, டில்லி மற்றும் பெங்களூரு பிரிவு ஊழியர்கள், நிறுவனத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சுபாஷ் தவறான தகவலை தந்துள்ளார். நிறுவனத்தின் 90 சதவீத பணியாளர்கள் அவரது திட்டத்தை நிராகரித்து விட்டனர்.
போராட்டம்:வெள்ளிக்கிழமை ஆறு மணிக்குள் நான்கு மாத ஊதியத்தை வழங்கினால் மட்டுமே, வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படும் என, அவர் மேலும் கூறினார்.இதனிடையே, இதுவரை ஒரு மாத ஊதியம் வழங்குவதற்கு கூட போதுமான நிதி இல்லை என்று தெரிவித்து வந்த கிங்பிஷர் நிறுவனம், தற்போது, மூன்று மாத ஊதியத்தை வழங்க முன் வந்துள்ளதன் பின்னணியில் "பார்முலா ஒன்' கார் பந்தயம் உள்ளதாக கூறப்படுகிறது.வரும் 27ம் தேதி நொய்டாவில் துவங்க உள்ள இந்த போட்டியின் போது, கிங்பிஷர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
"பார்முலா ஒன்' :இதை தவிர்க்கும் பொருட்டு, "பார்முலா ஒன்' போட்டி நிறுவனருள் ஒருவரான விஜய் மல்லையா, ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்க முன்வந்துள்ளதாக கூறப் படுகி றது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஊதிய பிரச்னைக்கு ஒருவாறு தீர்வு கண்டாலும், நிதி மற்றும் நிர்வாக புனரமைப்பு திட்டத்தை சமர்ப்பித்தால் மட்டுமே, அதன் விமான சேவை இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)