பதிவு செய்த நாள்
26 அக்2012
00:49
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழனன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. இந்நிலையில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை முடிவு, சந்தை மதிப்பீட்டை விட சிறப்பாக இருந்தது.மேலும், இம்மாதத்திற்குரிய, பங்கு பரிவர்த்தனைக்கான ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது.இது போன்ற காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
இங்கிலாந்து மற்றும் சீனாவில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருகிறது என்ற நிலைப்பாட்டாலும், அமெரிக்க மத்திய வங்கி, வளர்ச்சியை ஊக்குவிக்க உறுதி பூண்டுள்ளதாலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 48.61 புள்ளிகள் அதிகரித்து, 18,758.63 புள்ளிகளில் நிலைகொண்டது. 'தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 13.90 புள்ளிகள் உயர்ந்து, 5,705.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,718.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,685.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|