தொடர் மின் தடையால் "டைரி' தயாரிப்பு பாதிப்பு தொடர் மின் தடையால் "டைரி' தயாரிப்பு பாதிப்பு ... பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் ...
"கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' வேலை நிறுத்தம் "வாபஸ்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2012
00:51

புதுடில்லி: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் மேற்கொண்ட 27 நாள் வேலை நிறுத்தம் நேற்று முடிவிற்கு வந்தது. ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, நான்கு மாத ஊதிய நிலுவையை வழங்குவதாக, கிங்பிஷர் நிர்வாகம், உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடும் நிதி நெருக்கடியால், அதன் ஊழியர்களுக்கு ஏழு மாத ஊதியத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்தது.இதையடுத்து, ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி, இந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் ஊழியர்கள் சென்ற செப்டம்பர் 29ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.பல கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், மூன்று மாத ஊதியம் வழங்க, நிறுவனம் முன்வந்தது.ஆனால், இதை நிராகரித்த, 90 சதவீத பணியாளர்கள், வெள்ளிக்கிழமை (இன்று)ஆறு மணிக்குள் நான்கு மாத ஊதியத்தை வழங்கினால் மட்டுமே, வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படும் என, அறிவித்தனர்.இந்நிலையில், நேற்று விமானிகள் மற்றும் பொறியாளர்கள் இடையே, நிர்வாக தரப்பில் தனித்தனியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால், "நிறுவனம் நான்கு மாத ஊதியம் வழங்க முன்வந்ததை அடுத்து, பணியாளர்கள், இன்று முதல் (நேற்று) பணிக்கு திரும்புவார்கள்' என தெரிவித்தார்.விஜய்மல்லையாவை பங்குதாரராக கொண்ட, "பார்முலா ஒன்' கார் பந்தையம் நாளை நொய்டாவில் துவங்குகிறது. அப்போது, கிங்பிஷர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதை விரும்பாத விஜய்மல்லையா, ஒரு படி இறங்கி வந்து, ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.முன்னதாக, விமான போக்குவரத்து அமைச்சர் அஜீத்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அதை விட, நிறுவனம் நிதியாதார உறுதிமொழியையும், விமான சேவை விவரங்களையும் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு அளிக்க வேண்டியது முக்கியமாகும்.விமான கட்டுப்பாட்டு ஆணையம் உட்பட பல நிறுவனங்களுக்கு, கிங்பிஷர் பெரும் தொகையை பாக்கி வைத்துள்ளது. விமான சேவையை மீண்டும் தொடங்குவது என்பது, விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் திருப்தியை பொறுத்துள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)