தங்கம் விலை சற்று உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ... இந்தியா - சீனா பரஸ்பர வர்த்தகம் ரூ.5.50 லட்சம் கோடி இந்தியா - சீனா பரஸ்பர வர்த்தகம் ரூ.5.50 லட்சம் கோடி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
போர்டு நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2012
15:07

போர்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் புதிய தலைவராக ஜோகிந்தர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போர்டு இந்தியா தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் தற்போது மைக்கேல் போனிஹாம் பதவி வகித்து வருகிறார். போர்டு பிகோ, புதிய பியஸ்ட்டா உள்ளிட்ட கார் மாடல்களை அறிமுகப்படுத்தி இந்திய மார்க்கெட்டில் போர்டு முக்கியத்துவம் பெறுவதற்கு மைக்கேல் போனிஹாம் முக்கிய பங்கு வகித்தவர். மேலும், கடந்த 27 ஆண்டுகளாக போர்டு நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு நாடுகளில் மைக்கேல் போனிஹாம் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், டிசம்பர் மாதத்தோடு மைக்கேல் போனிஹாம் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, போர்டு இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ஜோகிந்தர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை போர்டு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் இவர் பொறுப்பேற்கிறார். இவர் தற்போது சென்னையிலுள்ள போர்டு நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக சேவை மையத்தின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)