மாட்டிறைச்சி ஏற்றுமதி 21.60 லட்சம் டன்னாக உயரும்மாட்டிறைச்சி ஏற்றுமதி 21.60 லட்சம் டன்னாக உயரும் ... பீ.எஸ்.என்.எல்: புதிய வணிகம் மூலம்ரூ.3,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு பீ.எஸ்.என்.எல்: புதிய வணிகம் மூலம்ரூ.3,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு ...
முன்பேர சந்தைகளில் ரூ.95 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2012
00:51

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், நடப்பு அக்டோபர், 15ம் தேதி வரையிலுமாக, நாட்டில் உள்ள முன்பேர சந்தைகளில், 94.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், நடைபெற்ற வர்த்தகத்தை (99.18 லட்சம் கோடி ரூபாய்) விட, 4.5 சதவீதம் குறைவாகும் என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வர்த்தகம், 42 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14.61 லட்சம் கோடியிலிருந்து, 20.79 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14.10 லட்சம் கோடியிலிருந்து, 17.29 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.

வேளாண் விளைபொருட்கள் மீதான வர்த்தகம், 28 சதவீதம் உயர்ந்து, 10.09 லட்சம் கோடியிலிருந்து, 12.88 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.அதேசமயம், தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம், 28 சதவீதம் சரிவடைந்து, 60.36 லட்சம் கோடியிலிருந்து, 43.75 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

நாட்டில்,தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 16 சந்தைகளும் உள்ளன. எப்.எம்.சி., அமைப்பு, யூனிவர்சல் கமாடிட்டி எக்ஸ்சேஞ் என்ற புதிய நிறுவனத்திற்கு, தேசிய அளவில், முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.இச்சந்தைகளில், தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், உலோகம், வேளாண் விளை பொருட்கள் உள்ளிட்ட வற்றின் மீது வர்த்தகம் நடைபெறுகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)