முன்பேர சந்தைகளில் ரூ.95 லட்சம் கோடிக்கு வர்த்தகம்முன்பேர சந்தைகளில் ரூ.95 லட்சம் கோடிக்கு வர்த்தகம் ... இயற்கை எரிவாயு உற்பத்தி 12.5 சதவீதம் குறைவு இயற்கை எரிவாயு உற்பத்தி 12.5 சதவீதம் குறைவு ...
பீ.எஸ்.என்.எல்: புதிய வணிகம் மூலம்ரூ.3,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2012
00:51

புதுடில்லி: பொதுத் துறையை சேர்ந்த பாரத் சஞ்சார் நிகம் நிறுவனம் (பீ.எஸ். என்.எல்.,), புதிய வணிக நடவடிக்கைகள் மூலம் கூடுதலாக, 3,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இதில், நிறுவனத்திடம் உள்ள உபரி நிலப்பகுதிகளில், வர்த்தக வளாகங்கள் உருவாக்குவது, தொலை தொடர்பு கோபுர வசதிகளை, தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவது மற்றும் பள்ளிக் கூடங்களுக்கு, அகண்ட அலைவரிசை சேவை அளிப்பது போன்றவை அடங்கும்.பீ.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, நாடு தழுவிய அளவில், 4,400 ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில், வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்து உள்ளது.முதல் கட்டமாக, நிறுவனம், 10 இடங்களில் உள்ள உபரி நிலங்களில், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உபரி நிலங்களை வர்த்தக பயன்பாட்டிற்கு அளிப்பதன் மூலம், ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.தொலைதொடர்பு கோபுரங்களை, வாடகைக்கு விடுவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,600 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என, இந்நிறுவனம், தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு வரைவு திட்டத்தை சமர்ப்பித்து உள்ளது.பீ.எஸ்.என்.எல்., நிறுவனம், கூட்டுத் திட்டத்தில், தொலைதொடர்பு சாதனங்கள் தயாரிப்பு துறையிலும் களம் இறங்க முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, 500 கோடி ரூபாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், இந்நிறுவனம், நாடு தழுவிய அளவில், 15 லட்சம் பள்ளிக் கூடங்களுக்கு, அகண்ட அலைவரிசை சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஒரு அகண்ட அலைவரிசை இணைப்பின் வாயிலாக, ஆண்டுக்கு, 5,000 ரூபாய் கிடைக்கும் என, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)