பதிவு செய்த நாள்
27 அக்2012
00:51
புதுடில்லி: பொதுத் துறையை சேர்ந்த பாரத் சஞ்சார் நிகம் நிறுவனம் (பீ.எஸ். என்.எல்.,), புதிய வணிக நடவடிக்கைகள் மூலம் கூடுதலாக, 3,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இதில், நிறுவனத்திடம் உள்ள உபரி நிலப்பகுதிகளில், வர்த்தக வளாகங்கள் உருவாக்குவது, தொலை தொடர்பு கோபுர வசதிகளை, தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவது மற்றும் பள்ளிக் கூடங்களுக்கு, அகண்ட அலைவரிசை சேவை அளிப்பது போன்றவை அடங்கும்.பீ.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, நாடு தழுவிய அளவில், 4,400 ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில், வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்து உள்ளது.முதல் கட்டமாக, நிறுவனம், 10 இடங்களில் உள்ள உபரி நிலங்களில், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உபரி நிலங்களை வர்த்தக பயன்பாட்டிற்கு அளிப்பதன் மூலம், ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.தொலைதொடர்பு கோபுரங்களை, வாடகைக்கு விடுவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,600 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என, இந்நிறுவனம், தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு வரைவு திட்டத்தை சமர்ப்பித்து உள்ளது.பீ.எஸ்.என்.எல்., நிறுவனம், கூட்டுத் திட்டத்தில், தொலைதொடர்பு சாதனங்கள் தயாரிப்பு துறையிலும் களம் இறங்க முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, 500 கோடி ரூபாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், இந்நிறுவனம், நாடு தழுவிய அளவில், 15 லட்சம் பள்ளிக் கூடங்களுக்கு, அகண்ட அலைவரிசை சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.
ஒரு அகண்ட அலைவரிசை இணைப்பின் வாயிலாக, ஆண்டுக்கு, 5,000 ரூபாய் கிடைக்கும் என, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|