பதிவு செய்த நாள்
27 அக்2012
00:54
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமானவெள்ளிக்கிழமையன்று மிகவும் மந்தமாக இருந்தது. லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில், பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், நுகர் பொருட்கள், ஆரோக்ய பராமரிப்பு உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த நிறுவனப்பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 133.29 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,625.34 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,729.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்ச மாக, 18,558.05 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், இந்துஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி., சிப்லா உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், மகிந்திரா அண்டு மகிந்திரா பஜாஜ் ஆட்டோ, கெயில் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 41 புள்ளிகள் குறைந்து, 5,664.30 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,697.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்ச மாக, 5,641.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|