தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ...  ரொக்க இருப்பு விகிதம் குறைய வாய்ப்பு ரொக்க இருப்பு விகிதம் குறைய வாய்ப்பு ...
மத்திய அரசின் பொது கடன் ரூ.39 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2012
00:39

புதுடில்லி: மத்திய அரசின், பொதுக் கடன், நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தஇரண்டாவது காலாண்டில், 39 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டை (37.63 லட்சம் கோடி ரூபாய்) விட, 3.6 சதவீதம் அதிகம் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், மொத்த பொதுக் கடனில், உள்நாட்டு கடனின் பங்களிப்பு, 89.6 சதவீதத்திலிருந்து, 90.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.சென்ற ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), உள்நாட்டு கடனின் பங்களிப்பு, 34.7 சதவீதம் (35.27 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.
இது, முந்தைய ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 33.2சதவீதம் என்ற அளவில் இருந்தது. நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நாட்டில், பணப் புழக்கம் குறைவாகவே இருந்தது. அதேசமயம், நிதிப் பற்றாக்குறை ரிசர்வ் வங்கி, நிர்ணயித்த அளவிலேயே இருந்தது.சென்ற ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நிறுவனங்களின் வரி மற்றும் தனிநபர் வருமான வரி வசூல் முறையே, 25.8 சதவீதம் மற்றும் 30.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64,900 கோடி ரூபாயாகவும், 58,249 கோடி ரூபாயாகவும் உயர்ந்து உள்ளன.இதேபோல், மறைமுக வரியின் கீழ் இடம்பெறும், உற்பத்தி மற்றும் சுங்க வரிகளும் அதிக அளவில் வசூலாகியுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)