பதிவு செய்த நாள்
28 அக்2012
00:39
புதுடில்லி: மத்திய அரசின், பொதுக் கடன், நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தஇரண்டாவது காலாண்டில், 39 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டை (37.63 லட்சம் கோடி ரூபாய்) விட, 3.6 சதவீதம் அதிகம் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், மொத்த பொதுக் கடனில், உள்நாட்டு கடனின் பங்களிப்பு, 89.6 சதவீதத்திலிருந்து, 90.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.சென்ற ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), உள்நாட்டு கடனின் பங்களிப்பு, 34.7 சதவீதம் (35.27 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.
இது, முந்தைய ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 33.2சதவீதம் என்ற அளவில் இருந்தது. நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நாட்டில், பணப் புழக்கம் குறைவாகவே இருந்தது. அதேசமயம், நிதிப் பற்றாக்குறை ரிசர்வ் வங்கி, நிர்ணயித்த அளவிலேயே இருந்தது.சென்ற ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நிறுவனங்களின் வரி மற்றும் தனிநபர் வருமான வரி வசூல் முறையே, 25.8 சதவீதம் மற்றும் 30.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64,900 கோடி ரூபாயாகவும், 58,249 கோடி ரூபாயாகவும் உயர்ந்து உள்ளன.இதேபோல், மறைமுக வரியின் கீழ் இடம்பெறும், உற்பத்தி மற்றும் சுங்க வரிகளும் அதிக அளவில் வசூலாகியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|