02. ஒரே பிரிமிய குழு காப்பீட்டு திட்டங்களுக்கு அதிக வரவேற்பு02. ஒரே பிரிமிய குழு காப்பீட்டு திட்டங்களுக்கு அதிக வரவேற்பு ... பரஸ்பர நிதியங்கள் 16 லட்சம் கணக்குகளை இழந்தன பரஸ்பர நிதியங்கள் 16 லட்சம் கணக்குகளை இழந்தன ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளின் கடன் வளர்ச்சி இலக்கை எட்டாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2012
02:52

மும்பை: நடப்பு நிதியாண்டில், வங்கிகளின் கடன் வளர்ச்சி, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவான, 17 சதவீதத்தை விட குறையும் என, ஆய்வு நிறுவனமான "இக்ரா' தெரிவித்துள்ளது. அரசு திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வுமற்றும் டெபாசிட் வளர்ச்சியில், மந்தநிலைபோன்றவைதான் இதற்கு காரணம் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பல வங்கிகளின் கடனுக்கான வட்டி விகிதம் உயர்வாக உள்ளதாலும், கடன் வளர்ச்சி குறையும் என, தெரிகிறது. சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில், மூன்று வங்கிகள் மட்டுமே, அவற்றின் அடிப்படை வட்டி விகிதத்தை, 10 - 25 சதவீதம் குறைத்துள்ளன.
ஒரு சில வங்கிகள், குறிப்பிட்ட பிரிவிலான கடன்களுக்கு மட்டும்வட்டியை குறைத்துள்ளன.

ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி, நடப்பு அக்.,5 ம் தேதி நிலவரப்படி, வங்கிகளின் கடன் வளர்ச்சி, ஆண்டுக்கணக்கில், 15.9 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.இது, சென்ற ஆண்டு இதே காலத்தில், 19.5 சதவீத மாக இருந்தது. குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களை உள்ளடக்கிய தொழில் துறையில், கடன் வளர்ச்சி குறைந்துள்ளது. அது போன்று சேவைகள் மற்றும் தனி நபர் கடன் பிரிவுகளின் கடன் வளர்ச்சி யும் சரிவடைந்துள்ளது.அதே சமயம் வேளாண் துறைக்கான கடன் வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், வங்கித் துறையின்டெபாசிட் வளர்ச்சி, 13.5 - 15 சதவீதமாக இருக்கும் என, "இக்ரா' மதிப்பிட்டுள்ளது.மத்திய நிதி அமைச்சகம், அண்மையில், அனைத்து வங்கிகளுக்கும், பெருந்தொகையை டெபாசிட்டாக திரட்டுவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுவும், வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி குறைய இடமளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில், நாட்டின் பணவீக்கம், சராசரியாக, 7.5 - 7.7 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதனால், அடுத்த ஐந்து மாதங்களுக்குள், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம், 0.50 சதவீதத்திற்கு மேல் குறைக்கப்பட வாய்ப்பில்லை என, "இக்ரா' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)