பதிவு செய்த நாள்
30 அக்2012
01:33
மும்பை:
நாட்டின், பங்கு வியாபாரம், வாரத்தின் துவக்க தினமான திங்கள் கிழமையன்று
அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதர ஆசிய பங்குச்சந்தைகளில்,
வர்த்தகம் மந்தமாக இருந்தது.
ரிசர்வ் வங்கி, இன்று அதன் நிதி ஆய்வு கொள்கையை வெளியிட உள்ளது. இது,
எப்படி இருக்குமோ என்ற அச்சப்பாட்டால், குறிப்பிட்ட சில துறைகளை சேர்ந்த
நிறுவன பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.இந்நிலையில், அமெரிக்காவில், பொருளாதார வளர்ச்சியில் சற்று முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளது என்ற செய்தி, பங்குச் சந்தைகளுக்கு வலுச்
சேர்த்தது.அமெரிக்காவில்,"சான்டி' என்று பெயரிடப்பட்டுள்ள புயலால்,
அமெரிக்க பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நேற்று
நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள்,
ஆரோக்ய பராமரிப்பு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகள் அதிக விலைக்கு
கைமாறின. அதேசமயம், பொறியியல் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், ரியல்
எஸ்டேட், மின்சாரம் போன்ற நிறுவன பங்குகளுக்கு தேவை குறைந்திருந்தன.மும்பை
பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 10.48
புள்ளிகள் உயர்ந்து, 18,635.82 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின்
இடையே, இப்பங்குச்சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 18,743.41
புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,572.02 புள்ளிகள் வரையிலும்
சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 14 களின் விலை குறைந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு
எண்,"நிப்டி' 1.30 புள்ளிகள் உயர்ந்து, 5,665.60 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,698.30 புள்ளிகள் வரையிலும்,
குறைந்தபட்சமாக, 5,645.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|