அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை விஞ்சியது இந்தியாஅரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை விஞ்சியது இந்தியா ... நாட்டின் நிதி பற்றாக்குறை இலக்கை எட்டுவது கடினம் நாட்டின் நிதி பற்றாக்குறை இலக்கை எட்டுவது கடினம் ...
"செபி'யின் நடவடிக்கையால்... புதிய பங்கு வெளியீடுகளில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2012
01:34

புதுடில்லி: பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யின் நடவடிக்கைகளால், இனி நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என, தெரியவந்து உள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், இதுவரையில், மூலதனச் சந்தையில், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டி கொள்வது மிகவும் குறைந்து போயுள்ளது.

புதிய பங்கு வெளியீடுகளில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், நெறிமுறைகள் மீறப்படுவ தாகவும் அதிக அளவில் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பங்கு வர்த்தகமும் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.இதுபோன்ற காரணங்களால், நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில், முதலீடு செய்வது மிகவும் குறைந்து போயுள்ளது.இதை கருத்தில் கொண்டு,"செபி' கடந்த ஒரு சில மாதங்களாக, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனால், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வேண்டி, பல நிறுவனங்கள்,"செபி' அமைப்புக்கு விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.இதையடுத்து,"செபி' அமைப்பின் தலைவர் யு.கே.சின்கா கூறியதாவது:முதலீட்டாளர்களின் நலன் கருதி, மத்திய அரசும், "செபி' அமைப்பும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக, சில்லரை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மூலதனச் சந்தையில் முதலீடு செய்வதற்கு, பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பங்கு வர்த்தகத்தில், அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது என்றாலும், ஒட்டுமொத்த அளவில், ஜனவரி மாதம் முதல் இதுவரையிலுமாக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு, 20 சதவீத அளவிற்கு ஆதாயம் கிடைத்துள்ளது.பங்குச் சந்தை மற்றும் புதிய பங்கு வெளியீடு களில், சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு சின்ஹா கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)