பதிவு செய்த நாள்
30 அக்2012
01:34
புதுடில்லி:
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யின் நடவடிக்கைகளால், இனி
நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என,
தெரியவந்து உள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில்,
இதுவரையில், மூலதனச் சந்தையில், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டி கொள்வது
மிகவும் குறைந்து போயுள்ளது.
புதிய பங்கு வெளியீடுகளில், பல்வேறு
முறைகேடுகள் நடப்பதாகவும், நெறிமுறைகள் மீறப்படுவ தாகவும் அதிக அளவில்
புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பங்கு வர்த்தகமும் அதிக ஏற்ற,
இறக்கத்துடன் இருந்து வருகிறது.இதுபோன்ற காரணங்களால், நிறுவனங்களின் புதிய
பங்கு வெளியீடுகளில், முதலீடு செய்வது மிகவும் குறைந்து போயுள்ளது.இதை
கருத்தில் கொண்டு,"செபி' கடந்த ஒரு சில மாதங்களாக, கடுமையான நடவடிக்கைகளை
மேற்கொண்டது.
இதனால், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வேண்டி, பல நிறுவனங்கள்,"செபி'
அமைப்புக்கு விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.இதையடுத்து,"செபி'
அமைப்பின் தலைவர் யு.கே.சின்கா கூறியதாவது:முதலீட்டாளர்களின் நலன் கருதி,
மத்திய அரசும், "செபி' அமைப்பும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
குறிப்பாக, சில்லரை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய
திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மூலதனச் சந்தையில் முதலீடு
செய்வதற்கு, பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பங்கு வர்த்தகத்தில், அதிக
ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது என்றாலும், ஒட்டுமொத்த அளவில், ஜனவரி மாதம்
முதல் இதுவரையிலுமாக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு, 20 சதவீத
அளவிற்கு ஆதாயம் கிடைத்துள்ளது.பங்குச் சந்தை மற்றும் புதிய பங்கு வெளியீடு களில், சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு சின்ஹா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|