"செபி'யின் நடவடிக்கையால்... புதிய பங்கு வெளியீடுகளில் முன்னேற்றம்"செபி'யின் நடவடிக்கையால்... புதிய பங்கு வெளியீடுகளில் முன்னேற்றம் ... ரிசர்வ் வங்கி கடன்கொள்கை இன்று அறிவிப்பு ரிசர்வ் வங்கி கடன்கொள்கை இன்று அறிவிப்பு ...
நாட்டின் நிதி பற்றாக்குறை இலக்கை எட்டுவது கடினம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2012
01:36

புதுடில்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிர்ணயிக்கப்பட்டுள்ள நாட்டின் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவது கடினம் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, முதலீடுகளை ஊக்குவிக்கவும், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், விஜய் கேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. இதன் அடிப்படையிலான, ஐந்தாண்டு நிதி ஒருங்கிணைப்பு திட்டத்தை ப.சிதம்பரம் நேற்று வெளியிட்டு பேசினார்.
அதன் விவரம் வருமாறு: மத்திய அரசு, நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிப்பற்றாக்குறை என்ற, இரு சவால்களை சமாளிக்க உறுதி பூண்டு உள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டு பட்ஜெட்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது.

சென்ற 2011-12ம் நிதியாண்டிற்கான, நாட்டின் நிதிப்பற்றாக்குறை, 5.8 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவது மிகவும் சவாலானது.அனைத்து அம்சங்களையும் கூர்ந்து ஆராய்ந்ததில், நடப்பு நிதியாண்டில், நிதிப்பற்றாக்குறையை, 5.3 சதவீதம் என்ற அளவில் தான் குறைக்க முடியும் என்று தெரிகிறது.இதை எட்டுவதற்கு நாம் கடின மாக உழைக்க வேண்டும். வரும் 2016 - 17ம் நிதியாண்டில், நிதிப்பற்றாக்குறையை 3 சதவீதமாக குறைக்க வேண்டும்.இதற்கு ஐந்தாண்டு நிதி ஒருங்கிணைப்பு திட்டம் அவசியம்.நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வரும் நோக்கில், அண்மையில் சில முக்கிய, கடின மான முடிவுகள் எடுக்கப்பட்டன. நடவடிக்கைகளின் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்தால், அதிக அளவில் முதலீடுகள் குவியும். பணவீக்கமும் குறையும். நாடு, நிலையான வளர்ச்சியை நீண்ட காலத்திற்கு பெறும். நடப்பு நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதம் (7,030 கோடி டாலர்) என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது, சென்ற நிதியாண்டில் 4.2 சதவீதமாக (7,820 கோடி டாலர்) ஆக இருந்தது.

முதலீடுகள் அதிகம் குவியும் என்பதால், நடப்பு கணக்குபற்றாக் குறை இலக்கு எட்டப்படும் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது. அன்னிய நேரடி முதலீடு, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு மற்றும் அயல்நாட்டு வர்த்தக கடன்கள் ஆகியவை, பங்கு மூலதன கணக்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளன.நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாயும், "ஸ்பெக்ட்ரம்' உரிமம் ஒதுக்கீடு வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாயும் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது. இதன் மூலம், பட்ஜெட்டில், மதிப்பிடப்பட்டுள்ள வருவாய் இனங்கள், பூர்த்தி செய்து கொள்ளப்படும்.அத்தியாவசிய செலவினங்கள், குறிப்பாக மூலதன செலவினங்களுக்கான நிதி வழங்கப்படும்.

அதே சமயம், திட்டப் பணிகளுக்கு நிதி செலவிடப்படாமல் தேங்குவதை தவிர்க்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.தகுதியானவர்கள் நேரடியாக ரொக்க மானியம் பெறவும், மானிய வினியோகத்தில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், "ஆதார்' திட்டம் உதவும். அரசு, இதன் பயன்பாட்டை விரிவு படுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ளது.நேரடி வரிகள் நடைமுறை சட்டம் குறித்த பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பரிந்துரைகளின் அடிப்படையில், இறுதியான சட்ட முன் வரைவு தயாரிக்கப்பட்டு, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.அதுபோன்று, பொருள்கள் மற்றும் சேவைகள் வரிகள் தொடர்பான பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், சென்ற நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது. பணவீக்கம் அதிகரித்தது. வரி வருவாய் குறைந்து, செலவினங்கள் அதிகரித்துள்ளன.

நடப்பு நிதியாண்டில், வரி வருவாய் இலக்கை எட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். திட்டம் மற்றும் திட்டம் சாராத செலவினங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால், பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை, பணவீக்க உயர்வு, நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பு போன்றவை தொடர்ந்திருக்கும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.பொருளாதார வளர்ச்சிக்கு ஐந்தாண்டு நிதி ஒருங்கிணைப்பு திட்டம் அவசியம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்தால், முதலீடு பெருகும் முதலீடுகள் குவியும் என்பதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை இலக்கு எட்டப்படும்

திட்டப் பணிகளுக்கு நிதி செலவிடப்படாமல் தேங்குவதை தவிர்க்க நடவடிக்கைநேரடி வரிகள், பொருள்கள் மற்றும் சேவைகள் வரி சட்டம் குறித்து பரிசீலனை பொது துறை பங்கு விற்பனையின் மூலம், 30 ஆயிரம் கோடியும், "ஸ்பெக்ட்ரம்' உரிமம் ஒதுக்கீட்டின் வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாயும் திரட்டப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)