பதிவு செய்த நாள்
30 அக்2012
17:33
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவிற்கு சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 204.97 புள்ளிகள் குறைந்து 18430.85 புள்ளிகளோடும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 67.70 புள்ளிகள் குறைந்து 5597.90 புள்ளிகளோடும் முடிந்தது. மத்திய ரிசர்வ் வங்கியின் காலாண்டு கொள்கை முடிவு இன்று வெளியிடப்பட்டதில் சி.ஆர்.ஆர் வட்டி விகிதம் குறைப்பு, கடன்களுக்கான விகிதம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை சரிந்து காணப்பட்டது. இந்திய பங்குச்சந்தையை அளவிட உதவும் 30 நிறுவனபங்குகளில் எஸ்பிஐ, ஹச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, மாருதி, டாடா மோட்டர்ஸ், ஹீரோ மோட்டர் கார்ஃப் ஆகிய 22 நிறுவனப்பங்குகள் சரிவில் முடிந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|