நாட்டின் தானிய உற்பத்தி 25 கோடி டன்னாக இருக்கும் நாட்டின் தானிய உற்பத்தி 25 கோடி டன்னாக இருக்கும் ... சீனாவின் அதிக உற்பத்தியால் மிளகாய் ஏற்றுமதி குறையும் சீனாவின் அதிக உற்பத்தியால் மிளகாய் ஏற்றுமதி குறையும் ...
ரேஷன் பொருட்களை நிறுத்த திட்டமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2012
01:59

புதுடில்லி: உணவு மானியத்தை பயனாளிகளுக்கு ரொக்கமாக வழங்கும் திட்டத்தால், ரேஷன் பொருட்கள் வினியோகம் கைவிடப்பட மாட்டாது என, திட்டக் குழுவின் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார். டில்லியில், மாநில உணவு அமைச்சர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: பொது வினியோக திட்டத்திற்காக, குறைந்தபட்ச ஆதரவு விலையில், உணவு தானியங்கள் கொள்முதல் செய்வது தொடரும். மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவதால், குறைந்தபட்ச ஆதரவு விலையில் உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்வதையும், ரேஷனில் பொருட்கள் வழங்குவதையும் கைவிடும் பேச்சிற்கே இடமில்லை. கோதுமை, நெல் போன்ற உணவு தானியங்களை, குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு தொடர்ந்து கொள்முதல் செய்யும்.
இந்த உணவு தானியங்கள், மானியம் இல்லாமல் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும். உணவு மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.இதன் மூலம், ரேஷன் பொருட்களை பெறுவது தொடர்பான முறைகேடுகளை தடுக்க முடியும்.

உணவு தானியங்களை விட, பால், மாமிசம், காய்கறிகள் ஆகியவற்றின் விலை உச்சத்தில் உள்ளன. ஒட்டுமொத்த உணவு பொருளாதாரத்தில், பொது வினியோக திட்டத்தின் பங்களிப்பு குறைந்து வருகிறது.தனி நபர் வருவாய் அடுத்த 10 ஆண்டு களில், இந்தியா, குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை கண்டால், தனி நபர் வருவாய் இரு மடங்காக உயரும். இது, உணவு நுகர்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை தொடர்ந்து, ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)