பதிவு செய்த நாள்
31 அக்2012
01:59
புதுடில்லி:
உணவு மானியத்தை பயனாளிகளுக்கு ரொக்கமாக வழங்கும் திட்டத்தால், ரேஷன்
பொருட்கள் வினியோகம் கைவிடப்பட மாட்டாது என, திட்டக் குழுவின் துணை தலைவர்
மான்டேக் சிங் அலுவாலியா கூறினார். டில்லியில், மாநில உணவு அமைச்சர்கள்
மாநாட்டில் அவர் பேசியதாவது: பொது வினியோக திட்டத்திற்காக, குறைந்தபட்ச
ஆதரவு விலையில், உணவு தானியங்கள் கொள்முதல் செய்வது தொடரும். மானியத்தை
நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவதால், குறைந்தபட்ச ஆதரவு விலையில் உணவுப்
பொருட்கள் கொள்முதல் செய்வதையும், ரேஷனில் பொருட்கள் வழங்குவதையும்
கைவிடும் பேச்சிற்கே இடமில்லை. கோதுமை, நெல் போன்ற உணவு தானியங்களை,
குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு தொடர்ந்து கொள்முதல் செய்யும்.
இந்த உணவு தானியங்கள், மானியம் இல்லாமல் பொது வினியோக திட்டத்தின் கீழ்
வழங்கப்படும். உணவு மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு
வைக்கப்படும்.இதன் மூலம், ரேஷன் பொருட்களை பெறுவது தொடர்பான முறைகேடுகளை தடுக்க முடியும்.
உணவு தானியங்களை விட, பால், மாமிசம், காய்கறிகள் ஆகியவற்றின் விலை
உச்சத்தில் உள்ளன. ஒட்டுமொத்த உணவு பொருளாதாரத்தில், பொது வினியோக
திட்டத்தின் பங்களிப்பு குறைந்து வருகிறது.தனி நபர் வருவாய் அடுத்த 10
ஆண்டு களில், இந்தியா, குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை கண்டால், தனி நபர்
வருவாய் இரு மடங்காக உயரும். இது, உணவு நுகர்வில் புதிய மாற்றத்தை
ஏற்படுத்தும்.சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை தொடர்ந்து,
ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு மான்டேக் சிங் அலுவாலியா
கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|