பதிவு செய்த நாள்
31 அக்2012
02:18
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாயன்று மிகவும் மோசமாக இருந்தது. ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட்டி விகிதங்கள் குறைக்கப்படவில்லை. இதனால், பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது.
அதேசமயம், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. 'சாண்டி' புயலால், தொடர்ந்து இரண்டாவது நாளாக, நியூயார்க் பங்குச் சந்தைகள் செயல்படவில்லை.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 204.97 புள்ளிகள் சரிவடைந்து, 18,430.85 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,718.28 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,393.42 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஏனைய எட்டு நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 67.70 புள்ளிகள் குறைந்து, 5,597.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,689.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,589.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|